sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

மனம் புண்படலாமா?

/

மனம் புண்படலாமா?

மனம் புண்படலாமா?

மனம் புண்படலாமா?


ADDED : பிப் 05, 2014 10:27 AM

Google News

ADDED : பிப் 05, 2014 10:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொதுவாக, கணவனை இழந்த பெண்களை இழிவாகக் கருதி ஒதுக்கி வைக்கிறது சமூகம். அதிலும், அவர்கள் எதிரே வந்தால், பலரும் ஒதுங்கிப் போவார்கள். காஞ்சி மடத்தில், தினமும் அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் ஒரு அம்மையார் சுத்தம் செய்ய வந்து விடுவார். அவர் கணவனை இழந்தவர். அதிகாலையில் மடத்திற்கு வரும் அவரைப் பார்ப்பவர்கள், ''இவள் முகத்தில் தினமும் காலையில் விழிக்க வேண்டியிருக்கிறதே!'' என்று முகம் சுளித்துப் பேசுவார்கள். இது அந்த அம்மையாருக்கும் தெரியும். இருந்தாலும், அதைக் கண்டு கொள்ளாமல் சேவையே பெரிதென நினைத்து, சுத்தப்படுத்தும் பணியைத் தொடர்ந்தார்.

திடீரென சில நாட்களாக அந்த அம்மையாரைக் காணவில்லை. காஞ்சிப்பெரியவர் இதுபற்றி ஊழியர்களிடம் விசாரித்தார்.

''அந்த அம்மாவுக்கு உடல் நலமில்லையாம்! அதனால் தான் வரவில்லை!'' என்றனர் அவர்கள்.

உடனடியாக பெரியவர் அந்த அம்மாவின் வீட்டுக்கே போய்விட்டார். தன் வீட்டு வாசலில் பெரியவர் வந்து நின்றதைக் கண்ட அந்த அம்மாவுக்கு ஆச்சரியமும் அதிர்ச்சியும்... ஓடி வந்து பெரியவரை நமஸ்கரித்தார். அவரிடம் உடல்நலம் விசாரித்த பிறகு மடத்திற்கு திரும்பினார் பெரியவர்.

நாம் எந்த நிலையில் இருந்தாலும், தெய்வம் கருணை செய்யும் என்பதற்கு இதை விட வேறென்ன உதாரணம் வேண்டும்!






      Dinamalar
      Follow us