sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

ஆசை முகம்

/

ஆசை முகம்

ஆசை முகம்

ஆசை முகம்


ADDED : செப் 13, 2019 10:59 AM

Google News

ADDED : செப் 13, 2019 10:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோதாவரி நதிக்கரையில் வசித்த கேசவ பட்டர், அவரது தந்தையின் நினைவு நாளில் முன்னோருக்கு கடன் செய்தார். அப்போது அந்தணர் ஒருவர் கேசவரின் வீட்டுக்கு வந்தார். அவருக்கு அறுசுவை உணவும், காணிக்கையும் கொடுத்து அனுப்பினார்.

அந்தணர் கிளம்பிய சிறிது நேரத்தில், பட்டருக்கு விபரீதம் நிகழ்ந்தது.

அவரது முகம் மட்டும் கழுதை முகமாக மாறியது.

பயத்தில் அலறிய பட்டர், அகத்திய முனிவரின் ஆசிரமம் நோக்கி ஓடினார்.

அவரை விழுந்து வணங்கினார்.

விஷயத்தை சொல்லும் முன்பே, அகத்தியர் ஞான திருஷ்டியால் நடந்ததை அறிந்தார்.

''இன்று உன் தந்தையின் நினைவு நாளாயிற்றே....'' என்றார் அகத்தியர்.

''ஆம்'' என தலையசைத்த பட்டரின் கண்களில் கண்ணீர்.

''நினைவு நாளில் பாவி ஒருவனுக்கு உணவு அளித்ததால் நேர்ந்த கொடுமை இது. இருந்தாலும் உன் கவலை தீர்க்கும் மருந்து திருப்பதியில் உள்ளது.

அங்குள்ள ஆகாச கங்கை தீர்த்தத்தில் நீராடி ஏழுமலையானைத் தரிசனம் செய். பழைய வடிவம் பெறுவாய்'' என்றார் அகத்தியர்.

ஆகாச கங்கையின் மகிமையால் கேசவ பட்டரின் ஆசை முகம் திரும்ப வந்தது.






      Dinamalar
      Follow us