sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

வாழும் வரை போராடு!

/

வாழும் வரை போராடு!

வாழும் வரை போராடு!

வாழும் வரை போராடு!


ADDED : செப் 16, 2014 04:51 PM

Google News

ADDED : செப் 16, 2014 04:51 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒரு வாலிபனுக்கு ஏராளமான பணம் இருந்தது. ஆனாலும், அவன் ஏதோ பிரச்னைகளில் சிக்கி தவித்துக் கொண்டே இருந்தான். வாழ்க்கையே வெறுத்துப் போனது. ஒருமுறை, அவனது தந்தையின் நண்பர் அவனது வீட்டுக்கு வந்தார். வாடிப்போன அவன் முகத்தைக் கண்டு 'என்ன பிரச்னை?' என்றார்.

''ஐயா! நான் நிறைய சம்பாதிக்கிறேன். பொருளையெல்லாம் மனைவி, பிள்ளைகளுக்காக செலவழிக்கிறேன். ஆனால், அவர்கள் இன்னும்...இன்னும்... என்கிறார்களே தவிர, இருப்பதைக் கொண்டு திருப்தி அடைந்த பாடில்லை. என் நண்பர்களும் அப்படியே! நான் செலவழித்தால் உடன் வருகிறார்கள். இல்லாவிட்டால் ஓடி விடுகிறார்கள். எனக்கு வேலை செய்து செய்து அலுத்து விட்டது. நிம்மதியைத் தேடி அலைகிறேன்,'' என்றான்.

பெரியவர் சிரித்தார். ''நீ கேட்கும் நிம்மதியான இடம் ஒன்றிருக்கிறது, வருகிறாயா?'' என்றார்.

அவனும் ஆர்வமாகப் புறப்பட்டான். அவர் அவனை சுடுகாட்டுக்கு அழைத்துச் சென்றார். அவன் அதிர்ந்தான்.

''பார்த்தாயா இளைஞனே! இங்கே எரிந்து கொண்டிருப்பவர்களை! இவர்களுக்கு தங்கள் மீது நெருப்பு எரிவது கூட தெரியாமல், நிம்மதியாக தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். இறப்பு என்ற ஒன்று வரும் வரை உலகில் நிம்மதி என்பதே கிடைக்காது. வாழும் காலம் வரை பிரச்னைகள் இருக்கத்தான் செய்யும். அதை எதிர்த்துப் போராடு. போராட்டத்தை முடித்ததும், கடவுள் உனக்கு நிரந்தர நிம்மதி தருவார்,'' என்றார்.

அவன் மனத்தெளிவுடன் கிளம்பினான்.






      Dinamalar
      Follow us