sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

புண்படுமே... மனம் புண்படுமே!

/

புண்படுமே... மனம் புண்படுமே!

புண்படுமே... மனம் புண்படுமே!

புண்படுமே... மனம் புண்படுமே!


ADDED : செப் 11, 2013 02:00 PM

Google News

ADDED : செப் 11, 2013 02:00 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பிறரை அவதூறாகப் பேசி மனதைப் புண்படுத்துவதில் சிலருக்கு அலாதி பிரியம். இவர்கள் ஏன் இப்படி பேசுகிறார்கள் தெரியுமா!

ஒரு ராஜாவுக்கு தான் மட்டுமே சிறந்த அறிவாளி, வீரன், சூரன், அழகன் என்றெல்லாம் நினைப்பு. தன்னைத் தேடி வருபவர்களை அவமானமாக பேசி, அவர்கள் முகம் குறுகிப் போவதைக் கண்டு மகிழ்ச்சியடைவான்.

ஒருமுறை துறவி ஒருவர் வந்தார். வயதான அவரால் நிமிர்ந்து நடக்க முடியவில்லை.

''சாமியாரே! <உம்மைப் பார்த்தால் ராமாயணக் கூனி மாதிரி இருக்கிறது. நடையைப் பார்த்தால் கழுதை நடப்பது போல் இருக்கிறது,'' என்று கேலி செய்தான்.

துறவி சிரித்தார்.

''நல்லது அரசனே! ஆனால், உன்னைப் பார்த்தால் என் கண்ணுக்கு பேரழகன் முருகப்பெருமானாகத் தெரிகிறது,'' என்றார்.

தான் அவரை இகழ, அவரோ நம்மை புகழ்கிறாரே என்று அரசனுக்கு இடித்தது.

''துறவியே! நான் உம்மை இகழ்ந்தேன். நீரோ புகழ்கிறீர்! என்ன காரணமோ!'' என்று அவரிடமே கேட்டான்.

''மகராஜனே! நம்மைப் போலவே இந்த உலகிலுள்ள ஜீவன்களும் மற்றவர்களுக்கு காட்சி தருமாம். நான் பார்க்கின்ற எல்லாமே எனக்கு, என் அப்பன் முருகனைப் போலவே காட்சி தருகின்றன,'' என சொல்லிவிட்டு, அங்கிருந்து சென்று விட்டார்.

அரசன் முகத்தில் ஈயாடியிருக்குமா என்ன!






      Dinamalar
      Follow us