sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

அன்புக்கு சக்தி அதிகம்

/

அன்புக்கு சக்தி அதிகம்

அன்புக்கு சக்தி அதிகம்

அன்புக்கு சக்தி அதிகம்


ADDED : ஆக 14, 2019 09:25 AM

Google News

ADDED : ஆக 14, 2019 09:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சத்யபாமா, ருக்மணி இருவரில் கிருஷ்ணர் மீது அன்பு மிக்கவர் யார் என்பதில் போட்டி வந்தது. நாரதரின் ஆலோசனைப்படி கிருஷ்ணருக்கு துலாபாரம் வைத்து தன் அன்பை நிரூபிப்பதாக பாமா முடிவு செய்தாள்.

துலாபாரம் என்றால் இக்காலம் போல அரிசி, பழம், காசு, வெல்லம் என பொருள் வைப்பதல்ல.

தங்கத்திலே துலாபாரம்! அதற்காக தராசு கொண்டு வரப்பட்டது.

ஒரு தட்டில் கிருஷ்ணர் உட்கார, சத்யபாமா தன்னிடமிருந்த தங்க நகைகளை மறு தட்டில் வைக்கத் தொடங்க, கிருஷ்ணருக்கு ஈடாக தட்டு உயரவில்லை.

தன் பெருமையை நிலைநாட்ட தாய் கொடுத்த சீதனங்களை வைத்தும், இம்மியும் தட்டு நகரவில்லை.

இந்நிலையில் அங்கு வந்த ருக்மணி நடந்ததைக் கண்டாள்.

அருகில் இருந்த மாடத்தில் துளசியை பறித்தாள். கிருஷ்ணரின் பாதம் தொட்டு வணங்கி, தன் கையில் இருந்த துளசியை ஆபரணத்தின் மீது வைத்தாள்.

என்ன ஆச்சர்யம்... தராசின் தட்டு கீழே சென்றது.

அந்தஸ்தை நிலைநாட்ட விரும்பிய பாமாவின் தங்கத்தை விட, ருக்மணி அன்பால் அளித்த துளசிக்கு சக்தி அதிகம் என்பது நிரூபணம் ஆனது.






      Dinamalar
      Follow us