sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

மனசு தான் காரணம்

/

மனசு தான் காரணம்

மனசு தான் காரணம்

மனசு தான் காரணம்


ADDED : மே 27, 2013 02:43 PM

Google News

ADDED : மே 27, 2013 02:43 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கபீர்தாசர் ஒருநாள் தன் மகனுடன் வழியில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு வீட்டு வாசலில் ஒரு பெண் கல் இயந்திரமான 'திருகை'யில் கோதுமை அரைத்துக் கொண்டிருந்தாள். அதை ஆர்வத்துடன் கண்டான் மகன்.

அவனிடம் கபீர்,'' இதன் பெயர் திருகை. மேலும் கீழுமாக இரு வட்டக்கற்கள் இருக்கும். மேல் கல்லில் இருக்கும் ஓட்டை வழியே கோதுமையைப் போட்டால் அது கீழ் கல்லில் விழுந்து விடும். நீட்டியிருக்கும் முளைக்குச்சியைச் சுற்றினால் தானியம் அரைபடும்,'' என்று விளக்கம் தந்தார் கபீர்.

அவர்கள் அவள் அருகில் வரும்போது தானியம் அரைபடும் 'கரபுர' சப்தம் கேட்டது. அப்போது கபீரின் கண்களில் நீர் பெருகியது.

கண்ணீருக்கான காரணத்தைக் கேட்டான் மகன்.

''ஒன்றுமில்லையப்பா! திருகையின் கற்களுக்கு நடுவில் தானியம் அரைபடுவது போல, மனிதனும் இன்ப துன்பங்களுக்கு இடையில் சிக்கித் தவிப்பதை நினைத்துப் பார்த்தேன். கண்ணீர் வந்து விட்டது,'' என்றார்.

மகன் சிரித்தபடி, ''ஏன் அப்பா அழுகிறீர்கள்? இன்ப துன்பம் இரண்டிலும் சிக்காமல் நடுவில் இருக்கும் கட்டையை சுற்றியபடி அரைபடாமல் சில தானியங்கள் கிடப்பதைப் பாருங்கள்.

நாமும் மனதை நடுநிலையில் வைத்து, கடவுளை மட்டும் நம்பி வாழ்ந்தால் இன்ப துன்பம் என்ன செய்து விடும்?''என்றான்.

மகனின் விளக்கம் கேட்ட கபீர்தாசரின் கண்ணீர் காணாமல் போனது.






      Dinamalar
      Follow us