sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

தாயினும் சிறந்த அன்பு

/

தாயினும் சிறந்த அன்பு

தாயினும் சிறந்த அன்பு

தாயினும் சிறந்த அன்பு


ADDED : மார் 08, 2022 04:56 PM

Google News

ADDED : மார் 08, 2022 04:56 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிறுவன் ஒருவனின் உடல் முழுவதும் கரும்புள்ளிகள் பரவிக் கொண்டிருந்தது. இதைக் கண்ட மாணவர்கள் பரிகாசம் செய்தனர். மற்றவருடன் சேர்ந்து விளையாட முடியாததால் சிறுவன் மனம் வாடினான். தாழ்வுமனப்பான்மையால் உடல் மெலிந்தான். சிகிச்சை செய்தும் பலனில்லை என்ற நிலையில் காஞ்சி மஹாபெரியவரை அவனது தாய் சந்தித்து முறையிட்டாள்.

''குழந்தை இங்கேயே என்னுடன் மூணுநாள் தங்கட்டுமா'' எனக் கேட்டார் மஹாபெரியவர்.

''எத்தனை நாள் வேண்டுமானாலும் பெரியவாகிட்ட இருப்பது பாக்கியம்'' என்றாள்.

ஓரிரு நிமிடமாவது பெரியவரின் சன்னதியில் நிற்க மாட்டோமா... அவரது அருட்பார்வை நம் மீது விழாதா... என அனைவரும் ஏங்கும் நிலையில் இந்த பாக்கியம் யாருக்கு கிடைக்கும் என தாய் மகிழ்ந்தாள்.

''நான் என்ன சாப்பிடுறேனோ அதைத் தான் நீயும் சாப்பிடணும்'' என்றார் மஹாபெரியவர்.

''பெரியவா... என்ன சொன்னாலும் கேட்பேன். உடம்பு குணமானால் போதும்'' என்றான் சிறுவன்.

''உப்பு சேர்க்காத மோரை அடிக்கடி சாப்பிடணும். ஆனா காபி, டீ எதுவும் சாப்பிடக் கூடாது சரியா'' என்றார்.

''சொல்றபடியே செய்றேன் பெரியவா'' என தலையாட்டினான்.

மடத்தில் சிறுவனுக்கு வரவேற்பு இருந்தது. அடிக்கடி குடிப்பதற்கு மோர் கொடுத்தனர். பெரியவரும் அவ்வப்போது நலம் விசாரித்தபடி இருந்தார். பெரியவர் பிைக்ஷ செய்த திருவமுது சிறுவனுக்கு வழங்கப்பட்டது.

வாழைத்தண்டை பொடிப்பொடியாக நறுக்கி தயிரில் கலந்து கொடுக்கச் சொன்னார். அதுவே பெரியவருக்கும் உணவாகவும், சிறுவனுக்கு பிரசாதமாகவும் தரப்பட்டது. உப்பு, காரம், கடுகு, உளுந்து சேர்க்காத பச்சை வாழைத்தண்டை சாப்பிட்டு பசியை பொறுத்துக் கொண்டான். கரும்புள்ளிகள் மங்கத் தொடங்கின. வெறும் வாழைத்தண்டும், மோரும், நோயைக் குணப்படுத்த போதுமா... மஹாபெரியவர் நிகழ்த்திய அற்புதம் தான் இது.

சிறுவனின் தாய் மகிழ்ச்சியை சொல்ல வார்த்தைகள் இல்லை. மஹாபெரியவர் விடை கொடுத்த போது, ''ஒரு மாசத்துக்கு உப்பு, புளி, மிளகாய் சேர்க்காத உணவைச் சாப்பிடு. உடம்பு நலம் பெறும்'' என சிறுவனுக்கு ஆசியளித்தார். கண்ணீருடன் விடைபெற்றார் தாய். இதில் நம்மை நெகிழச் செய்யும் விஷயம் என்னவென்றால் இந்த சம்பவம் நடக்கும் போது காய்கறிகளுடன் உணவை பிைக்ஷயாக மஹாபெரியவர் ஏற்று வந்தார். ஆனால் சிறுவனுக்கு பத்தியம் தேவை என்பதால் அதையே தானும் பின்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பத்திய உணவை பின்பற்றச் சொல்லி சிறுவனை அவனது வீட்டுக்கு அனுப்பியிருக்கலாம். தாயும் அக்கறையுடன் செய்திருப்பாள். ஆனால் மடத்தில் தங்க வைத்து தானும் பத்தியம் இருந்து குணப்படுத்தினார் என்பதில் இருந்து அவரது தெய்வத்தன்மை புலப்படுகிறது. தாயிற் சிறந்த அந்த தயாமூர்த்தியை நாமும் சரணடைவோம். வாழ்வில் நலம் பெறுவோம்.

காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்

தாய் மதத்தை பழிப்பது தாயை பழிப்பதற்கு சமம்.

எல்லோருக்கும் நல்ல நாளாக அமைய கடவுளை வேண்டுங்கள்.

குலதெய்வத்தை ஆண்டுக்கு இருமுறையும் இஷ்ட தெய்வத்தை வாய்ப்பு கிடைக்கும் போதும் தரிசியுங்கள்.

மனதை கெடுக்கும் சினிமா, 'டிவி' தொடர்களை பார்க்காதீர்கள்.

இன்று செய்த நன்மை, தீமைகளை உறங்கும் முன் சிந்தியுங்கள்.

உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்

அஸ்மிந் பராத்ம நநு பாத்மகல்பே

த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!

அநந்த பூமா மமரோக ராஸிம்

நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!

எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.

'ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம்' என தினமும் 108 முறை சொல்லுங்கள்

எஸ்.கணேச சர்மா

ganesasarma57@gmail.com






      Dinamalar
      Follow us