sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

கடமை... அது கடமை

/

கடமை... அது கடமை

கடமை... அது கடமை

கடமை... அது கடமை


ADDED : டிச 23, 2016 10:51 AM

Google News

ADDED : டிச 23, 2016 10:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மகாபாரத யுத்தம் நடந்து கொண்டிருந்தது. கிருஷ்ணர் அர்ஜுனனின் தேருக்கு சாரதியாக இருந்து வழி நடத்தினார். மாலை நேரத்தில் சூரியன் மேற்கில் மறைந்தான்.

போர் நிறுத்தப்பட்டது. எல்லாரும் பாசறைக்குத் திரும்பினார்கள். கண்ணனும் அர்ஜுனனும் ஓய்வெடுத்துக் கொண்டனர்.

அர்ஜுனன் யுத்தம் செய்த களைப்பில் தூங்கி விட்டான். கண்ணன் குதிரை லாயத்திற்கு சென்று குதிரையை தேங்காய் நாரினால் குளிப்பாட்டிக் கொண்டிருந்தார்.

குதிரையின் கனைப்பைக் கேட்ட அர்ஜுனன் எழுந்து வந்தான். பணியாட்கள் செய்யும் வேலையை, கண்ணன் செய்வது கண்டு திகைத்தான்.

“என்ன கிருஷ்ணா! இந்த வேலையைக் கூடவா நீ செய்ய வேண்டும்?” என்றான்.

“கடமை என்று வந்து விட்டால், அதை முழுமையாகவும், சிறப்பாகவும் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் வெற்றி பெற முடியாது. நீ எனக்கு சாரதி பணியைக் கொடுத்தாய். சாரதி தானே குதிரைகளுக்கு பொறுப்பாளன். அந்தக் கடமையைத் தான் செய்து கொண்டிருக்கிறேன். நீயும் எதைச் செய்தாலும் அதை முழுமையாகச் செய். எதைச் செய்கிறாயோ அதுவாகவே மாறி விடு. வெற்றி உன் கையில்!” என்று உபதேசம் செய்தார். கண்ணனின் கடமை உணர்வு கண்டு அர்ஜுனன் வியந்தான்.






      Dinamalar
      Follow us