sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

நாலு பேருக்கு சொல்லுங்க!

/

நாலு பேருக்கு சொல்லுங்க!

நாலு பேருக்கு சொல்லுங்க!

நாலு பேருக்கு சொல்லுங்க!


ADDED : நவ 27, 2019 12:01 PM

Google News

ADDED : நவ 27, 2019 12:01 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒரு நல்ல விஷயம் தெரிந்தால், அதை நாலு பேருக்கு சொல்லி பயன் பெறச் செய்ய வேண்டும் என்பதைச் சொல்லும் வேடிக்கை கதை இது.

ஒரு பெண்ணுக்கு இரண்டு தன்னம்பிக்கை பாட்டும், அவற்றின் பொருளும் தெரியும். அது தனக்கு மட்டுமே தெரிந்திருக்க வேண்டும். மற்றவருக்கு தெரிந்தால் முன்னேறி விடுவார்கள் எனக் கருதி வெளிப்படுத்தாமல் இருந்தாள். கணவரிடம் கூட சொல்லியதில்லை. அவன் தன்னை விட புத்திசாலியாகி விடக்கூடாதே என்பதே காரணம். அந்த பாடல்களும், பொருளும் அவளைப் பழி வாங்க முடிவெடுத்தன. பாடல்கள் செருப்பாக மாறி அவள் வீட்டு வாசலில் கிடந்தன. பொருள் சட்டையாக மாறி வீட்டுக்குள் நுழைந்தது. வெளியே போன கணவர் வீட்டுக்குள் நுழையும் போது, செருப்பை பார்த்து யாரோ வந்திருக்கிறார் என யூகித்தான். உள்ளே கிடந்த சட்டையைப் பார்த்து, “யார் வந்தது?” எனக் கேட்டான். 'யாரும் வரவில்லையே!' என அவள் சொன்னாள். அவள் மீது சந்தேகப்பட்டு அடித்தான். வருத்தத்துடன் கோயில் மண்டபத்தில் போய் படுத்தான். அப்போது அங்கு ஒவ்வொரு வீட்டிலும் அணைக்கப்பட்ட தீபங்கள் வந்து சேர்ந்தன.

கடைசியாக வந்த தீபம், “இதோ! படுத்திருக்கிறானே! இவன் மனைவியை சந்தேகப்பட்டவன்'' என நடந்ததை மற்ற தீபங்களிடம் விளக்கியது. உண்மையை உணர்ந்த அவன், மனைவியிடம் மன்னிப்பு கேட்டதோடு பாட்டையும், பொருளையும் கேட்டான். அவை செருப்பு, சட்டையாக மாறிவிட்டதால் அவளுக்கும் மறந்து போனது. இனியாவது பயனுள்ள விஷயங்களை உடனுக்குடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!






      Dinamalar
      Follow us