sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

நிதானமான ஆசை!

/

நிதானமான ஆசை!

நிதானமான ஆசை!

நிதானமான ஆசை!


ADDED : மே 20, 2014 04:17 PM

Google News

ADDED : மே 20, 2014 04:17 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குருகுலம் ஒன்றில் சீடர்கள் பலர் இருந்தனர்.

ஒரு சீடன் மட்டும் குருவிடம், ஆர்வமுடன் சந்தேகம் கேட்டபடி இருந்தான்.

குருவும் சளைக்காமல் விளக்கம் அளிப்பார்.

ஒருமுறை சீடன் குருவிடம், மனதில் எப்போதும் ஆசை எழுவதைப் பற்றிக் கேட்டான்.

'' ஆசை விஷயத்தில் நிதானத்தைக் கடைபிடி '' என்றார் குரு.

சீடன் அமைதியானான்.

ஒருநாள் குருவைப் பார்க்க பெரியவர் ஒருவர் வந்தார். அவரிடம் நிம்மதிக்கு வழிகாட்டுமாறு வேண்டினார்.

குருவும், ''மனதில் எழும் ஆசையைக் குறையுங்கள். அதுவே நிம்மதிக்கான வழி!'' என்று உபதேசித்தார்.

இதைக் கேட்ட சீடனுக்கு மனம் தாங்கவில்லை.

''குருவே! இடையில் குறுக்கிடும் என்னை மன்னித்து விடுங்கள். இருபது வயதுள்ள என்னையும் ஆசைப்படாதே என அறிவுரை

சொன்னீர்கள். ஆனால், இவரையோ ஆசையைக் குறைக்கச் சொல்கிறீர்கள். எப்போது தான் மனிதன் ஆசைப்படுவது?'' என்று கேட்டான்.

குரு சிரித்தபடி, ''நல்ல கேள்வி கேட்டாய். இளம் வயதில் ஆசையை வெறுக்கத் தேவையில்லை. ஆனால், நிதானம் அவசியம். முதுமையில் ஆசைப்படுவது கிடைத்தாலும், அதை உதறித் தள்ளி விடும் விவேகம் வேண்டும். பெருமாள் கோயில் பொங்கல் என்றாலும், சர்க்கரை வியாதியுள்ளவன் அதை மறுப்பது போல'' என்று விளக்கம் அளித்தார்.

சீடனுக்குப் புரிந்தது. யோசித்தால் நமக்கும் இந்த உண்மை புரியும்.






      Dinamalar
      Follow us