sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

அன்றே நடந்த ஆலோசனை கூட்டம்

/

அன்றே நடந்த ஆலோசனை கூட்டம்

அன்றே நடந்த ஆலோசனை கூட்டம்

அன்றே நடந்த ஆலோசனை கூட்டம்


ADDED : பிப் 25, 2014 05:06 PM

Google News

ADDED : பிப் 25, 2014 05:06 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் தோற்றுப்போனதும், தோற்ற கட்சி டில்லியில் கூடி ஆலோசனை நடத்தியது. கேஸ் சிலிண்டரை குறைத்தது தப்பு என்றார் ஒருத்தர். இன்னொருவரோ, 'இந்த ஆதார் தேவை தானா?' என்றார். இப்படி பல பல காரணங்களை ஆலோசனைக் கூட்டத்தில் வெளிப்படுத்தினர்.

ஒருசமயம், தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் யுத்தம் நடந்தது. 33 நாட்களாக கடும் போர். 32 நாட்களாக தேவர்கள் பக்கமே வெற்றி. 33வது நாள் படுதோல்வி அடைந்தார்கள். தோல்விக்கான காரணம் பற்றி அறிய கூட்டம் கூடியது. மற்ற நாட்களில், ஒழுங்காக காயத்ரி மந்திரம் பாராயணம் செய்து விட்டு போனவர்கள், 32 நாள் வெற்றி மமதையில், அன்று பாராயணம் செய்யாமல் போய் விட்டார்கள். விளைவு... தோல்வியைத் தழுவினார்கள்.

மனிதர்களும் இதுபோல தான்! நமக்கு இவ்வளவு அழகான உடலைக் கொடுத்து, வசதியைக் கொடுத்து வாழச்செய்தான்

இறைவன். ஆனால், மனிதன் அவனை மறந்தான். இஷ்டத்திற்கு வாழ்ந்தான். குடித்தான், கும்மாளம் போட்டான். கடைசியில், நோய்க்கு ஆளானதும், ''ஐயோ! கடவுளே! என்ன பாவம் செய்தேன்! வலி பொறுக்க முடியலியே! காப்பாற்று!'' என கதறுகிறான்.

ஓட்டுப் போட்ட மக்களை மறந்து, இஷ்டத்திற்கு ஆடினால், அரசியல் கட்சிக்கு தோல்வி ஏற்படுகிறது. நமக்கு நல்வாழ்வு அளித்த கடவுளை மறந்தால், வாழ்க்கையே ஆடி விடுகிறது. அரசியல்கட்சிகளும் திருந்தணும்! மக்களும் திருந்தணும்! சரிதானே!






      Dinamalar
      Follow us