sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

முனிவரை மிஞ்சிய மன்னன்

/

முனிவரை மிஞ்சிய மன்னன்

முனிவரை மிஞ்சிய மன்னன்

முனிவரை மிஞ்சிய மன்னன்


ADDED : டிச 22, 2017 10:58 AM

Google News

ADDED : டிச 22, 2017 10:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அம்பரீஷ மன்னர் ஏகாதசி விரதம் இருப்பார். விரதம் முடிந்ததும் ஒருவருக்கு உணவிட்டு சாப்பிடுவார். ஒருமுறை கோபக்காரரான துர்வாசமுனிவர் வந்தார். அவரை சாப்பிட அழைத்ததும், துர்வாசர் பூஜை முடித்து விட்டு வருவதாகச் சொன்னார். வெகு நேரமாகியும் வரவில்லை. திதி முடிய சில நிமிடங்களே இருந்ததால் பெரியவர்களின் ஆலோசனைப்படி, சிறிது தீர்த்தம் அருந்தி விரதம் முடித்தார். அப்போது துர்வாசர் அங்கு வர, தன்னை மதிக்காமல் விரதம் முடித்த அம்பரீஷன் மீது ஒரு பூதத்தை ஏவினார்.

உடனே விஷ்ணுவின் சுதர்சன சக்கரம் அங்கு தோன்றி பூதத்தைக் கொன்று, பின் துர்வாசரை துரத்தியது. மகாவிஷ்ணுவிடம் சரணடைந்தார் துர்வாசர்.

''நான் பகதர்களின் அன்புக்கும், சிரத்தையான விரதங்களுக்கும் கட்டுப்பட்டவன், ஆகையால் அம்பரீஷனிடமே சென்று மன்னிப்புக் கேளுங்கள்,'' என்றார் விஷ்ணு. துர்வாசரும் அப்படியே செய்து உயிர் தப்பினார்.

ஏகாதசி விரதம் அந்தளவுக்கு உயர்ந்தது.






      Dinamalar
      Follow us