sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

வெற்றிக்கு காரணம் மனசு!

/

வெற்றிக்கு காரணம் மனசு!

வெற்றிக்கு காரணம் மனசு!

வெற்றிக்கு காரணம் மனசு!


ADDED : பிப் 24, 2015 12:20 PM

Google News

ADDED : பிப் 24, 2015 12:20 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒரு இளைஞனுக்கு மகானாக வேண்டுமென்ற ஆசை எழுந்தது. என்ன செய்தால் மகான் ஆகலாம் என யோசித்தான். ஒரு மகானிடமே கேட்டுவிட்டால், தன் கேள்விக்கு பதில் கிடைத்து விடுமென ஒரு சிறந்த மகானை நாடிப் போனான். காவியும், பட்டையுமாய் அமர்ந்திருந்த அவரிடம்,''சுவாமி! உங்களை மகான் என்று ஊரே புகழ்கிறது. உங்களது இந்த நிலைக்கு காரணம் என்ன?'' என்று கேட்டான்.

''உண்கிறேன், உறங்குகிறேன், தியானம் செய்கிறேன்,'' என்றார் அவர்.

இளைஞன் சிரித்து விட்டான்.

''ஏன் சாமி! இதைத்தான் ஊரில் எல்லாரும் செய்கிறார்களே! அப்படியானால் எல்லாரும் மகான் தானா?'' என்று சற்று நையாண்டியாகக் கேட்டான்.

''தம்பி! எல்லாரும் அதைத் தான் செய்கிறார்கள். ஆனால், நான் உண்ணும் போதும், உறங்கும் போதும், தியானம் செய்யும் போதும் அதை மட்டுமே செய்கிறேன். மற்றதை பற்றி நினைப்பதில்லை. மனதை நான் செய்கிற செயலில் மட்டுமே நிலைப்படுத்துகிறேன். ஆனால், சாதாரண மனிதர்கள் ஒன்றைச் செய்யும் போதே, மற்றதில் மனதைத் திருப்புகிறார்கள். அதுதான் அவர்களுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம்,'' என்றார்.

இப்போது தான் இளைஞனுக்குப் புரிந்தது. மனதை ஒருநிலைப்படுத்தி ஒன்றைச் செய்தால் தான் மகானாக முடியுமென்று!

மனதை நிலைப்படுத்தி செய்யும் ஒவ்வொரு செயலும் வெற்றி பெறும்.






      Dinamalar
      Follow us