sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

சபதம் செய்த சாஸ்திரி

/

சபதம் செய்த சாஸ்திரி

சபதம் செய்த சாஸ்திரி

சபதம் செய்த சாஸ்திரி


ADDED : ஜன 13, 2017 10:49 AM

Google News

ADDED : ஜன 13, 2017 10:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சியைச் சேர்ந்த மணிசாஸ்திரி என்பவர், பெரியவரைத் தரிசிக்க காஞ்சிபுரம் வந்தார். காதில் கடுக்கண், கையில் பிரஸ்லெட், விரல்களில் மோதிரம் என்று பணக்கார தோரணையுடன் காட்சியளித்தார்.

பெரியவர் சாஸ்திரியிடம், “வைதீகம் எல்லாம் எப்படி இருக்கு? வருமானம் வருகிறதா?” என்று கேட்டார்.

“பெரியவா அனுக்கிரஹத்தில் வைதீகம் சிறப்பா இருக்கு. எதிர்பார்க்கும் தட்சணையை (சன்மானம்) விட கர்த்தாக்கள் (ஹோமம் நடத்துபவர்கள்) அதிகமாகவே தர்றாங்க” என்று பதிலளித்தார்.

பெரியவர் மணிசாஸ்திரியிடம், “நீ மற்றவர்களைக் கசக்கிப் பிழிந்து சன்மானம் வாங்குறதா கேள்விப்பட்டேன். உன்னைப் பார்த்தாலே படாடோபம் தெரியுது. வேதத்தை வியாபாரமாக்காதே. வருமானத்தில கொஞ்சம் வேதபாடசாலை செலவுக்கு கொடு. அது உன் சந்ததியைக் காப்பாற்றும்,” என்று அறிவுரை கூறினார். அந்த நிமிடம் முதல் மணி சாஸ்திரி, நகை அணியவோ, சன்மானம் அதிகம் பெறவோ மாட்டேன்' என்று சபதம் செய்தார்.

பெரியவரும் மகிழ்ந்து ஆசி வழங்கினார்.






      Dinamalar
      Follow us