sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

ஏன் இத்தனை கடவுள்!

/

ஏன் இத்தனை கடவுள்!

ஏன் இத்தனை கடவுள்!

ஏன் இத்தனை கடவுள்!


ADDED : ஜன 28, 2014 02:09 PM

Google News

ADDED : ஜன 28, 2014 02:09 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயிலில் பக்திச் சொற்பொழிவு நடந்து கொண்டிருந்தது. பேசியவர், ''ஸ்ரீதேவியை வணங்கு; அருள் தருவார் பெருமாள். துர்க்கையை துதித்தால் துன்பம் நீங்கும். பிள்ளையாரை வழிபட பிரச்னை தீரும். ஒப்பிலியப்பனை வணங்கினால் வாழ்வு வளமாகும்'' என்று பேசிக் கொண்டிருந்தார். ஒருவர் எழுந்து இடைமறித்தார்.

''ஐயா! ஆண்டவன் ஒன்று தானே! ஆனால், பல தெய்வங்களின் பெயரைச் சொல்கிறீர்கள். இன்ன கடவுளிடம், இன்னதான் கேட்க வேண்டும் என விதிமுறை இருக்கிறதா என்ன? அல்லது ஒவ்வொரு கடவுளும் ஒவ்வொன்று தருவரா?''

பேச்சாளர் கேட்டார்.

''உன் வயதென்னப்பா?''

''ஏழு''

''உன் பக்கத்தில் இருப்பவர்கள் யாரப்பா....?''

''என் அம்மா; அக்கா; அது என் அப்பா...''

பேச்சாளர் சொன்னார்.

''உனது கல்வி, உணவு, விளையாட்டுப் பொருள் என தேவையைப் பொறுத்து, அப்பாவிடமோ, அம்மாவிடமோ, அக்காவிடமோ கேட்கிறாய் இல்லையா....! அதே போல், எல்லோரும் அவரவருக்கு தேவையானதை அவரவருக்கு பிரியமான கடவுளிடம் கேட்கிறார்கள். இதனால் தான் பலதெய்வ வழிபாடு! புரிகிறதா!'' என்றார்.

சிறுவன் புரிந்து கொண்டான். கேட்ட எல்லாருக்கும் சிறந்த உபதேசமானது.






      Dinamalar
      Follow us