sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

மன்னிக்க மாட்டாயா? உன் மனம் இரங்கி!

/

மன்னிக்க மாட்டாயா? உன் மனம் இரங்கி!

மன்னிக்க மாட்டாயா? உன் மனம் இரங்கி!

மன்னிக்க மாட்டாயா? உன் மனம் இரங்கி!


ADDED : ஆக 30, 2019 02:27 PM

Google News

ADDED : ஆக 30, 2019 02:27 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மகாபாரதக் கதையை வியாசர் சொல்லச் சொல்ல எழுதினார் முதல் கடவுளான மகாகணபதி. இதே போல காஞ்சி மகாசுவாமிகள் அருளிய விஷயங்களை 'தெய்வத்தின் குரல்' என்னும் நுாலாக தொகுத்தார் எழுத்தாளர் ரா.கணபதி.

இதில் விநாயகர் பற்றி பலரும் அறியாத செய்திகளை சுவாமிகள் சொல்லியிருக்கிறார். அவற்றில் சில கதைகள் நம்மை சிரிக்கவும், சிந்திக்கவும், பக்தி அனுபவம் பெறவும் துாண்டும் விதத்தில் இருப்பது சுவாமிகளுக்கே உரிய தனிச்சிறப்பு. அப்படி ஒருமுறை கடுக்காய் பிள்ளையார் குறித்து விளக்கினார்.

திருவாரூருக்குத் தெற்கில் உள்ள ஊர் திருக்காறாயில். இந்த ஊரில் விற்பனை செய்ய ஜாதிக்காய் மூடைகளை கொண்டு வந்தார் ஒரு வியாபாரி. சுங்கச் சாவடியில் ஜாதிக்காய்க்கு வரி விதிக்கும் நடைமுறை அப்போது இருந்தது. அதை தவிர்க்க எண்ணிய வியாபாரி, அதிகாரிகளிடம் 'கடுக்காய் மூடைகள்' என பொய் சொன்னார். இதற்காக வண்டியின் முன்னும், பின்னும் கடுக்காய் மூடைகளையும், நடுவில் ஜாதிக்காய் மூடைகளையும் அடுக்கியிருந்தார். சோதனை செய்த அதிகாரிகளும் அதைக் கண்டு ஏமாந்தனர். வியாபாரியும் மூடைகளுடன் ஊருக்குள் நுழைந்தார்.

இத்தலத்தில் உள்ள விநாயகர் தன் திருவிளையாடலைத் தொடங்கினார். சம்பந்தப்பட்டவர் திருந்தும் விதமாக இரவோடு இரவாக வேடிக்கை காட்டினார். வண்டியிலுள்ள ஜாதிக்காய் மூடை எல்லாம் கடுக்காயாக மாறின.

மறுநாள் காலையில் மூடைகளைப் பிரித்த போது அதிர்ந்து போனார். தவறை உணர்ந்தார். ''அப்பனே! விநாயகா! பணத்திற்கு ஆசைப்பட்டு வரிஏய்ப்பு செய்த என்னை மன்னிக்க வேண்டும்'' என தோப்புக்கரணம் இட்டார். முன்பு போல கடுக்காய் எல்லாம் ஜாதிக்காயாக மாறினால், அதற்குரிய வரி, அபராதம் கட்டுவதாக ஒப்புக் கொண்டார். இரக்க சுபாவம் கொண்ட விநாயகரும் ஜாதிக்காயாக மாற்றி அருள்புரிந்தார். மனம் நெகிழ்ந்த வியாபாரி கண்ணீர் சிந்தினார். தவறு செய்தவரை திருத்திய இத்தல விநாயகர் 'கடுக்காய்ப் பிள்ளையார்' என பெயர் பெற்றார்.

காஞ்சிப்பெரியவர் உபதேசங்கள்

* காபி, டீ குடிப்பதை தவிருங்கள்.

* பட்டு ஆடை உடுத்தாமல், பருத்தி ஆடை உடுத்துங்கள்.

* மனதை பாழ்படுத்தும் சினிமா, 'டிவி' தொடர்களை பார்க்காதீர்கள்.

தொடர்புக்கு: thiruppurkrishnan@hotmail.com

திருப்பூர் கிருஷ்ணன்






      Dinamalar
      Follow us