/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
/
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
ADDED : மே 22, 2020 06:40 PM

* ஆற்று நீர் போல் ஒரே திசை நோக்கி பயணிக்கும் நல்லவன் லட்சியத்தை அடைவான்.
* உலகில் பணம்தான் முக்கியம். பணத்தால் தான் உலகமே இயங்குகிறது.
* இருப்பதைக் கொண்டு திருப்தியுடன் வாழ்வதே சிறந்த வாழ்க்கை.
* வளர்ச்சியும், வீழ்ச்சியும் மனிதனுக்கு நாக்கைப் பொறுத்தே அமைகிறது.
* வறுமை, நோய், துன்பம் எல்லாம் அவரவர் செய்த பாவம் என்ற மரத்தில் பழுக்கும் பழங்கள்.
* உறவினரைக் கஷ்ட காலத்திலும், நண்பனை ஆபத்து நேரத்திலும், மனைவியை நோயில் வாடும் போதும் தான், அவரவரின் உண்மையான குணத்தை அறிய முடியும்.
* முட்டாள்தனமான செயல்கள் மனதிற்கு பெரும் துன்பத்தை விளைவிக்கும்.
* மனதில் நினைப்பதை வெளியே சொல்லாமல் நிறைவேற்றுபவனே வெற்றியாளன்.
* சிறிது சிறிதாக படித்தால் கூட முட்டாளும் அறிவாளியாக மாறுவான்.
* எப்போதும் பிறந்த வீட்டிற்கு செல்லும் பெண்ணால் குடும்ப அமைதி கெடும்.
* சிறந்த ஆலோசனை சொல்லும் அமைச்சர் இல்லாத அரசு சீக்கிரமே நஷ்டமாகும்.
* கடவுள் அருள் இல்லாவிட்டால் சிறிய செயலைச் செய்வது கூட பெரும் சவாலாக இருக்கும்.
* அரசர், ஆசிரியர், நண்பன், புத்திசாலி, மடையன் ஆகியோரோடு வாக்குவாதம் செய்யக் கூடாது.
சபதமிடுகிறார் சாணக்கியர்