sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

வீடு நிறைய தீபம் ஏற்றுங்கள்

/

வீடு நிறைய தீபம் ஏற்றுங்கள்

வீடு நிறைய தீபம் ஏற்றுங்கள்

வீடு நிறைய தீபம் ஏற்றுங்கள்


ADDED : அக் 23, 2019 02:55 PM

Google News

ADDED : அக் 23, 2019 02:55 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'தினமும் விளக்கேற்று ' என்று பெரியவர்கள் சொல்கிறார்களே! ஒரு சுவிட்சை போட்டால் விளக்குகள் சுவாமி படங்களை சுற்றி எரிகிறதே என சிலர் நினைப்பதுண்டு. அப்படிப்பட்டவர்கள் விளக்கின் தத்துவத்தை அறிவது அவசியம்.

* விளக்கேற்ற 'திரி' என்னும் கயிறு வேண்டும். கயிறை ' பாசம்' என்பர். பாசம் என்னும் கயிற்றால் மனிதன் கட்டப்பட்டிருக்கிறான். குடும்பம், குழந்தை, பணம் என நமக்கு பலவற்றின் மீது பாசம் (ஈடுபாடு) இருக்கிறது.

* விளக்கெரிய எண்ணெய் தேவை. எண்ணெய்யை சமஸ்கிருதத்தில் 'ஸ்நேகம்' என்பர். 'ஸ்நேகம்' என்றால் நட்பு, அல்லது உறவு. எண்ணெய்யை விளக்கில் ஊற்றும் போது பிசுக்கு ஒட்டும். இதுவே வாழ்வின் மீதுள்ள பற்றைக் குறிக்கும்.

* விளக்கில் 'ஜோதி' என்னும் நெருப்பு ஏற்றப்படும். இது திரி, எண்ணெய்யை கரைத்து விடும். கடைசியில் அதுவும் அணையும். அதாவது பந்த பாசம், பற்றை அறுத்தால், ஞானம் என்னும் ஜோதியில் (கடவுள்) ஐக்கியம் ஆகலாம் என்பதே தத்துவம்.

அடேங்கப்பா! இவ்வளவு விஷயம் இருக்கும் போது தீபம் ஏற்றாமல் இருக்கலாமா என்ன! தீபாவளி என்பதற்கு 'தீபங்களின் வரிசை' என்பது பொருள். அதனால் வீடு நிறைய தீபங்களை ஏற்றுங்கள்.






      Dinamalar
      Follow us