sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 21, 2025 ,ஐப்பசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

ஆராரோ ஆரிராரோ . . . இந்த தாலாட்டின் பொருள் விளக்குகிறார் வாரியார்

/

ஆராரோ ஆரிராரோ . . . இந்த தாலாட்டின் பொருள் விளக்குகிறார் வாரியார்

ஆராரோ ஆரிராரோ . . . இந்த தாலாட்டின் பொருள் விளக்குகிறார் வாரியார்

ஆராரோ ஆரிராரோ . . . இந்த தாலாட்டின் பொருள் விளக்குகிறார் வாரியார்


ADDED : மார் 25, 2011 02:12 PM

Google News

ADDED : மார் 25, 2011 02:12 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* உலகம் முழுவதும் நிறைந்த இறைவனை, எளிதாகக் கிடைக்கக் கூடிய பூ மற்றும் நீரினால் வழிபட வேண்டும். வழிபாட்டுக்கு அன்பும், ஆசாரமும் இரண்டு கண்கள் போன்றவையாகும்.

* இடையறாது பேசும் நாவை நரம்பின்றிப் படைத்திருக்கிறான் இறைவன். அது இஷ்டத்திற்கு வளைகிறதே என்பதற்காக, நாம் கண்டதையெல்லாம் பேசக்கூடாது. அவனுடைய நாமங்களைச் சொன்னால், அது நாக்களித்தவனுக்கு நாம் செய்யும் நன்றியாகும்.

* இறைவன் தந்த இந்த உடம்பினால் அவனை வழிபடுவது கடமை. தவறினால் அது மடமை.

* கோயிலில் ஒருமித்த மனத்துடன் வழிபாடு செய்ய வேண்டும். வீண் வார்த்தைகள் பேசுவதும், எச்சில் துப்புதலும், பிற தீமைகள் செய்வதும் அறவே கூடாது.

* வயலில் என்ன விதை விதைக்கிறோமோ, அதுவே விளைந்து நாம் உண்ணக் கூடியதாக அமைகிறது. அதுபோல் மனதாலும், வாக்காலும், காயத்தாலும் பிற உயிர்களுக்கு நன்மை செய்தால் நாமும் துன்பமின்றி இன்பமாக வாழ முடியும்.

* சந்நியாசம் வாங்கிவிட்ட மகன் எதிரே வந்தாலும், தந்தை வணங்க வேண்டும். ஆனால், சந்நியாசம் வாங்கிவிட்டாலும், அந்த சந்நியாசி மகன் தாயை வணங்க வேண்டும். அத்தனை சிறப்புப் பெற்றவள் தாய்.

* கடவுள் பக்தி இருந்தால் மனதில் சாந்தியும் அமைதியும் நிலைத்திருக்கும். உண்ணாமல் கூட இருந்துவிடலாம். ஆனால், கடவுளை எண்ணாமல் இருக்கக் கூடாது.

* இறைவன் நடுநிலை தவறாதவன்; பாரபட்சமில்லாதவன்; நாம் செய்த தன் வினைகளுக்கு ஏற்பச் சுகதுக்கங்களை வகுத்து விதிக்கின்றான். இறைவனுடைய அருளாணையால் விதிக்கப்பட்டது விதி எனப்படுகிறது.

* நமக்கு உண்மையான உறவு கடவுள் தான். அதனால் தான் குழந்தையைத் தாலாட்டும் போது 'ஆராரோ, ஆரிராரோ' (யார் யாரோ யார் இவரோ...இந்தக்குழந்தை யாரோ...இது என்ன வினையை விதைத்து விட்டு என் வயிற்றில் வந்து கருவாயிற்றோ.. என்பது இதன் பொருள்) என்று பாடுகிறார்கள்.

* இறைவன் எங்கும் இருப்பினும் கோயிலில் விளங்கித் தோன்றுகிறான். மின்சாரக் கம்பி முழுவதும் மின்சாரம் பரவியிருந்தாலும் பல்ப்பில் வெளிப்படுவது போல், எங்கும் பரந்து நிறைந்துள்ள இறைவனுடைய திருவருள் கோயிலிலுள்ள திருவுருவத்தில் வெளிப்பட்டு அருள் புரிகிறது.

* இறைவனின் கருணையை நினைத்து உடலும், உள்ளமும் உருக நின்றாலே, அவனுடன் இரண்டறக் கலந்து, பேரின்பத்தைப் பெற்று விடலாம்.

* நெற்றியில் ஜோதி இருக்கிறது என்பதை உணர்த்துவதற்காக நெற்றியில் பொட்டு வைக்கிறோம். புருவ மத்தியில் நாட்டம் வைத்தவனுக்கு இன்பமும் இல்லை; துன்பமும் இல்லை.

* விறகைக் கடைந்தால் தீ வெளிப்படும், பாலைக் கடைந்தால் நெய் வெளிப்படும், அதுபோல் தியானம் புரிந்தால் இறைவன் வெளிப்பட்டுக் காட்சி தருவான்.






      Dinamalar
      Follow us