/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
ஆதிசங்கரர் வணங்கிய ஆறுமுகமங்கலம்
/
ஆதிசங்கரர் வணங்கிய ஆறுமுகமங்கலம்
ADDED : செப் 17, 2012 10:31 AM

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தில் விநாயகருக்கென தனிக்கோயில் உள்ளது. இவர் ஆயிரத்தெண் விநாயகர் எனப்படுகிறார். விநாயகர் கோயில்களில் கொடிமரம் உள்ள கோயில் இது. தேர்த்திருவிழாவும் நடத்தப்படும். கி.மு. 4ம் நூற்றாண்டில் சோமார வல்லபன் என்ற மன்னன் நர்மதை நதிக்கரையிலிருந்து 1008 அந்தணர்களை வரவழைத்து பெரிய யாகம் நடத்த முடிவெடுத்தான். அதில் ஒருவர் மட்டும் குறைய அந்தணர் வடிவில் ஆயிரத்தெட்டாவது நபராக வந்து யாகத்தை பூர்த்தி செய்தார் விநாயகர். இதன் காரணமாக இந்த விநாயகர் ஆயிரத்தெண் விநாயகர் எனப்படுகிறார். ஆதிசங்கரர் இத்தலத்து விநாயகரை வணங்கிய பின் திருச்செந்தூர் சென்று 'சுப்ரமண்ய புஜங்க ஸ்தோத்திரம்' பாடி தனது வியாதி நீங்கப் பெற்றார்.
திறக்கும் நேரம்:
காலை 6 - 11, மாலை 5 முதல் இரவு 8.
இருப்பிடம்:
திருநெல்வேலி புதிய பஸ் ஸ்டாண்டிலிருந்து 50 கி.மீ. தூரத்தில் ஏரல். அங்கிருந்து 7 கி.மீ., தூரத்தில் ஆறுமுகமங்கலம்.
போன்:
0461 232 1486.