
* தினமும் பசுவுக்கு புல், அகத்திக்கீரை கொடு. இதுவே சிறந்த தர்மம்.
* ஒருவருக்கு வாழ்நாள் முழுவதும் என்ன சிந்தனை உள்ளதோ அதுவே கடைசி காலத்தில் வரும்.
* வேதம் சம்பந்தமான செயல்களுக்கு உதவி செய். புண்ணியம் சேரும்.
* நீ எப்படி வாழ்கிறாயோ அப்படியே பிறரும் வாழ வேண்டும் என கடவுளிடம் வேண்டிக்கொள்.
* சாப்பிடாமல் இருந்து கடவுளின் நாமத்தை சொன்னால் ஆன்மபலம் அதிகரிக்கும்.
* எட்டு முதல் எண்பது வயதுள்ளவர்கள் மாதந்தோறும் வரும் ஏகாதசி திதியில் விரதம் இருப்பது சிறப்பு.
* பசி என்பது நோயைப் போன்றது. அதற்கு அளவான உணவை மருந்தாகக் கொடு.
* சாப்பிடுவது, பேசுவது என வாய்க்கு இரு வேலை உண்டு. அதை பாதியாக குறை. மனபலம் கூடும்.
* முன்ஜென்மத்தில் செய்த வினைகளுக்கு ஏற்பவே தற்போது உனக்கு வாழ்க்கை அமைந்துள்ளது.
* மனிதராக பிறந்தவர்கள் கடவுள், முன்னோருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.
* குழந்தையின் மனதில் பக்தி என்ற விதையை விதைத்தால், அது ஒரு நாள் முளைத்து விடும்.
* யாருக்கும் கஷ்டமும் வரக்கூடாது என நினைப்பதே உண்மையான அஹிம்சை.
சொல்கிறார் காஞ்சி மஹாபெரியவர்

