sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

தைரியம் தரும் தைரியலட்சுமி

/

தைரியம் தரும் தைரியலட்சுமி

தைரியம் தரும் தைரியலட்சுமி

தைரியம் தரும் தைரியலட்சுமி


ADDED : மே 11, 2018 02:01 PM

Google News

ADDED : மே 11, 2018 02:01 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூர் மகாலட்சுமியை தரிசிக்க தைரியம் கிடைக்கும்.

தல வரலாறு: பிரளயகால வெள்ளத்தில் கடல் பொங்கி பூமி அழியத் தொடங்கியது. ஆனால், பூமியில் ஒரே ஒரு பகுதியை மட்டும், அன்னை மகாலட்சுமி தன் வலது கையால் உயர்த்தி அழிவில் இருந்து காப்பாற்றினாள். அந்த இடம் 'கரவீர்' எனப்பட்டது. 'கர' என்பதற்கு 'கை' என்றும், 'வீர்' என்றால் 'வீரம்' என்றும் பொருள்.

லட்சுமி வீரச்செயல் புரிந்ததால் 'வீரலட்சுமி' 'தைரிய லட்சுமி' என அழைக்கப்படுகிறாள். அஷ்டலட்சுமிகளில் ஒருத்தியான வீரலட்சுமியை வழிபட்டால் மற்ற ஏழு லட்சுமிகளின் அருளும் நமக்கு கிடைக்கும். இத்தலத்தின் மகிமை அறிந்த அகத்தியர், காசிக்கு நிகரான புண்ணிய தலமாக விளங்க வேண்டும் என சிவனிடம் கோரிக்கை வைக்க, அவரும் அருள்புரிந்தார். முற்காலத்தில் 'குளபுரா' என்று அழைக்கப்பட்டது.

கோலாசுரன் என்ற அரக்கனை சிங்க வாகனத்தில் எழுந்தருளி லட்சுமி வதம் செய்த பின், 'கோலாப்பூர்' என மாறியது.

கரவீர பீடம்: சக்தி பீடங்களில் இத்தலம் 'கரவீர பீடம்' எனப்படுகிறது. மராட்டியர் மன்னர்களின் பாணியில் கட்டப்பட்ட இக்கோயிலில், மகாதுவாரம் எனப்படும் பிரதான மேற்கு வாசலில் அழகிய தீப ஸ்தம்பங்கள் காண்போரை கவரும் விதத்தில் உள்ளன. கருவறையில் மகாலட்சுமி சதுர பீடத்தில் நின்றகோலத்தில் அமுதசுரபியை ஏந்தியபடி இருக்கிறாள். ஆதிசேஷன் குடைபிடித்த நிலையில் உள்ளார். 1300 ஆண்டுகள் பழமை மிக்க அன்னையின் சிற்பம் மிக அரிதான கரிய ரத்தினக் கல்லால் ஆனது.

சூரிய பூஜை: இங்கு லட்சுமியை வழிபடும் விதத்தில் ஆண்டின் ஆறு நாட்கள் மாலை நேரத்தில், கருவறையில் உள்ள ஜன்னல் வழியாக ஒளிக்கதிர்களை சூரியன் பரப்புகிறார். ஜன.31, நவ. 9ல் மகாலட்சுமியின் திருவடியிலும், பிப்.1, நவ.10ல் மார்பிலும், பிப்.2, நவ.11ல் திருமேனி முழுவதும் சூரியக்கதிர் படர்கிறது. இந்த சமயத்தில் தரிசிப்போருக்கு உடல்நலம், செல்வம் பெருகும். காளி, சரஸ்வதி, நவக்கிரகங்கள், பாண்டுரங்கன், காசி விஸ்வநாதர், சீதை, ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயர் ஆகியோருக்கும் இக்கோயிலில் சன்னதிகள் உள்ளன.

எப்படி செல்வது: சென்னையில் இருந்து 960 கி.மீ., மும்பையில் இருந்து 370 கி.மீ., புனேயிலிருந்து 233 கி.மீ.,

விசேஷ நாட்கள்: நவராத்திரி, சிவராத்திரி, ஸ்ரீராமநவமி, அனுமன் ஜெயந்தி

நேரம்: காலை 6:00 - 10:00 மணி; மாலை 4:00 - 8:00 மணி

தொடர்புக்கு: 0231 - 254 1779

அருகிலுள்ள தலம்: 21 கி.மீ.,யில் ஜோதிபா மும்மூர்த்திகோயில்






      Dinamalar
      Follow us