sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

தசாவதார கிருஷ்ணர்

/

தசாவதார கிருஷ்ணர்

தசாவதார கிருஷ்ணர்

தசாவதார கிருஷ்ணர்


ADDED : பிப் 13, 2021 03:57 PM

Google News

ADDED : பிப் 13, 2021 03:57 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குடி குடியைக் கெடுக்கும் என்பார்கள். இதனால் குடும்பம் படும் பாட்டை சொல்லி மாளாது. மது அருந்துவோரை திருத்தி நல்வாழ்வு தரும் தலமாக ஆந்திர மாநிலம் வேப்பஞ்சேரி லட்சுமி நாராயணர் கோயில் உள்ளது. இங்குள்ள தசாவதார கிருஷ்ணர் சிலை சிறப்பு மிக்கது.

750 ஆண்டுகளுக்கு முன் மூன்றாம் குலோத்துங்கனின் ஆட்சிக் காலத்தில் இக்கோயில் கட்டப்பட்டது. அந்நியப் படையெடுப்பால் சிதலமடையவே வழிபாடு மறைந்தது. மழையின்றி போனதால் இங்குள்ள மக்கள் வறுமையில் வாடினர். இதற்கான காரணத்தை ஆராய்ந்த போது ''வேப்பஞ்சேரியில் குடியிருக்கும் லட்சுமி நாராயணருக்கு பூஜை நடைபெறாததே பஞ்சம் வரக் காரணம். சுவாமிக்கு நித்ய பூஜை, அபிஷேகம், ஆராதனை குறைவின்றி நடந்தால் பூமி செழிக்கும். கால்நடைகள் பெருகும். குடும்பங்கள் நலம் பெறும்'' என அசரீரி கேட்டது. இதன் பின்னர் கோயில் புதுப்பிக்கப்பட்டு பூஜைகள் நடத்தத் தொடங்கினர்.

கோயிலின் கொடிமரத்தை தாண்டியதும் அமைதி தவழும் முகத்துடன் துவார பாலகர்கள் ஜயர், விஜயரைத் தரிசிக்கலாம். கோயில் விமானத்தில் கலியுக கண்ணன் வீற்றிருக்கிறார். ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் ஸ்ரீனிவாசப்பெருமாள் மூலவராக இருக்கிறார். இங்குள்ள தசாவதார குளத்தின் தீர்த்தம் இனிப்பாக உள்ளது. குளத்தின் நடுவே காளிங்க நர்த்தனமாடும் கிருஷ்ணர் சிற்பம் உள்ளது. குளத்தின் கரையில் 21 அடி உயர ஒரே கல்லால் ஆன தசாவதாரக் கிருஷ்ணர் சிலை உள்ளது. மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம், வாமனம், பரசுராம், ராமர், பலராமர், கிருஷ்ணர், கல்கி என்னும் மகாவிஷ்ணுவின் தசாவதாரமும் ஒரே சிலையில் வடிக்கப்பட்டுள்ளன. கோயிலின் தென்புறத்தில் அஷ்டலட்சுமி சன்னதி உள்ளது. மது அருந்துபவர்கள் இங்கு விளக்கேற்றி வழிபட்டால் மனம் திருந்தி வாழ்வர். செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடக்கும் ராகுகால பூஜையில் பங்கேற்றால் சுபவிஷயத்தில் குறுக்கிடும் தடைகள் விலகும். மகாலட்சுமியை மடி மீது அமர வைத்த நிலையில் லட்சுமி நாராயணரை தரிசிக்க பக்தர்கள் தவம் செய்திருக்க வேண்டும். இவரை தரித்தால் நல்ல மணவாழ்க்கை அமையும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

எப்படி செல்வது: சித்துாரில் இருந்து 15 கி.மீ., திருப்பதியில் இருந்து 60 கி.மீ., வேலுாரில் இருந்து 45 கி.மீ.,

விசஷே நாள்: கிருஷ்ண ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, ஸ்ரீ ராமநவமி

நேரம்: காலை 6:00 - இரவு 8:30 மணி

தொடர்புக்கு: 98947 45768

அருகிலுள்ள தலம்: வேலுார் ஜலகண்டேஸ்வரர் கோயில் 45 கி.மீ.,

நேரம்: காலை 6:30 - 1:00 மணி; மாலை 3:00 - 8:30 மணி






      Dinamalar
      Follow us