sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

ஆசைக்கும் அளவு இருக்கு!

/

ஆசைக்கும் அளவு இருக்கு!

ஆசைக்கும் அளவு இருக்கு!

ஆசைக்கும் அளவு இருக்கு!


ADDED : மே 09, 2020 06:18 PM

Google News

ADDED : மே 09, 2020 06:18 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* தினமும் புதுப்புது ஆசைகளை மனதில் வளர்க்காதீர்கள். மீறினால் தேவையற்ற சுமைகளை சுமக்க நேரிடும்.

* கடவுளை வெளியில் தேடாமல் இதயத்தில் தேடுங்கள். அங்கு கருணை இருந்தால் அவரது அருள் கிடைக்கும்.

* கடவுளை அடைவதற்கு குறுக்கு வழி எதுவும் கிடையாது. உண்மை ஒன்றே ஒரே வழி.

* நற்செயல் செய்வதற்காக கடவுளால் படைக்கப்பட்ட கருவிகளே மனிதர்கள்.

* அருளின் உயர்ந்த வடிவம் மவுனம். அதுவே உயர்ந்த உபதேசமும் கூட.

* வாயை மட்டும் மூடிக் கொண்டு மனதை அலைபாய விடுவது மவுனம் ஆகாது. அதனால் எந்தப் பயனும் இல்லை.

* மனதை எண்ணங்களிலிருந்து விடுவிப்பதே ஆன்மிக சாதனையின் நோக்கமாகும்.

* மந்திரங்களை இடைவிடாது சொல்வதால் மனம் அடங்கும். அந்நிலையில் மந்திரம், மனம், மூச்சு என எல்லாம் ஒன்றே என்பதை உணரலாம்.

* சுயமாக இயங்க முடியாததற்கு காரணம் வலிமையற்ற மனமே.

* குறை எப்போதும் வெளியில் இருக்காது; மனதில் தான் இருக்கிறது.

* அகந்தையை துறந்தால் ஆண்டவனின் அருள் உண்டாகும்.

* நான் யார் என்பதை அறிந்து கொள்ளவே, மந்திரம், தவம், வழிபாடு எல்லாம் இருக்கிறது.

குறைக்கச் சொல்கிறார் ரமணர்






      Dinamalar
      Follow us