sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

பணத்தைப் பார்க்காதே.. குணத்தை மட்டும் பார்

/

பணத்தைப் பார்க்காதே.. குணத்தை மட்டும் பார்

பணத்தைப் பார்க்காதே.. குணத்தை மட்டும் பார்

பணத்தைப் பார்க்காதே.. குணத்தை மட்டும் பார்


ADDED : ஜன 12, 2018 11:52 AM

Google News

ADDED : ஜன 12, 2018 11:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜன.15 திருவள்ளுவர் தினம்

* மனிதன் மற்றவருடைய குணத்தை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும். ஒருவரிடம் இருக்கும் பணத்துக்காக மதிப்பது கூடாது.

* மழையை எதிர்பார்த்து உயிர்கள் வாழ்வது போல மக்கள் நேர்மையானவர்களின் நல்லாட்சியை எதிர்பார்த்து வாழ்கின்றனர்.

* என் வீடு, நாட்டையும் மேன்மை அடைய செய்வேன் என்னும் உறுதியுடையவனுக்கு தெய்வம் தன் ஆடையை இறுக உடுத்தி கொண்டு உதவ முன் வரும்.

* துன்பம் வரும் போது தாங்குவதற்கு நல்ல பிள்ளைகள் இல்லாத வீடும், நாடும் அடிப்பகுதியை வெட்டினால் சாயும் மரம் போல் விழுந்து விடும்.

* குளத்தில் உள்ள தாமரை மலரின் தண்டு, நீரின் ஆழத்திற்கேற்ப வளர்வது போல, ஒருவரின் உயர்வு அவரின் முயற்சிக்கேற்ப இருக்கும்.

* பிறருக்கு உதவுபவர்கள் வறுமையுடன் இருப்பது கொடுமையானது. பிறருக்கு தீங்கு செய்பவர்கள் செல்வ வளத்துடன் இருப்பது கொடுமையிலும் கொடுமையானது.

* எதிரியை விட பொறாமையால் தான் ஒருவருக்கு அதிகமாக துன்பம் வருகிறது. இந்த குணம் எப்போதும் கொஞ்சம் கூட நன்மை தராது.

* எலும்பு இல்லாத புழுவை வெயில் காய்ந்து கொல்வது போல, அன்பு இல்லாத உயிர்களை அறக்கடவுள் காய்ந்து கொல்வார்.

* இன்பம் தரும் இனிய சொற்களை விட்டு, துன்பம் தரும் தீய சொற்களை கூறுவது, நல்ல பழம் இருக்க காய்களை உண்பது போலாகும்.

* ஒருவர் செய்த உதவியை ஒருபோதும் மறப்பது கூடாது. அவர் செய்த கெடுதலை நினைக்கவே கூடாது.

* நல்லவனிடம் சேரும் பணம், இனிய பழங்கள் நிறைந்த மரம் ஊரின் நடுவில் வளர்ந்தது போல, பலருக்கும் பயன்படும்.

* நல்ல மனைவி அமைந்து விட்டால், ஒருவனது வாழ்விற்கு தேவையான எல்லாம் நாடி வந்து விடும்.

* ஒரு பிறவியில் ஒருவன் பெற்ற கல்விச் செல்வம், ஏழேழு பிறவிக்கும் தொடர்ந்து வந்து பாதுகாப்பு அளிக்கும்.

* வெற்றியை அடைய விரும்புபவன், சிறிதும் மனச்சோர்விற்கு இடம் கொடுக்காமல் காலத்தை எதிர்பார்த்து காத்திருப்பான்.

* ஆடை அவிழ்ந்தால், கை அதை விரைந்து சரி செய்வது போல, துன்பத்தை துடைக்க ஓடி வருபவனே உண்மையான நண்பன்.

* பிறருக்கு சொந்தமான ஒன்றை, திருட வேண்டும் என மனதால் நினைப்பது கூட பெரும்பாவம்.

* உடலில் வெளிப்புறத்தை நீரால் துாய்மைப் படுத்தலாம். ஆனால் உள்ளத்தை உண்மை ஒன்றே துாய்மையாக்கும்.

* நற்குணம் கொண்டவன் என்று பெருமையுடன் வாழ விரும்பினால், பொறுமையை வாழ்வில் வளர்த்துகொள்ள வேண்டும்.

திருத்துகிறார் தெய்வப்புலவர்






      Dinamalar
      Follow us