sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

பொறுமையாக இருப்பவன் சக்தியற்றவன் அல்ல..!

/

பொறுமையாக இருப்பவன் சக்தியற்றவன் அல்ல..!

பொறுமையாக இருப்பவன் சக்தியற்றவன் அல்ல..!

பொறுமையாக இருப்பவன் சக்தியற்றவன் அல்ல..!


ADDED : ஆக 25, 2016 12:47 PM

Google News

ADDED : ஆக 25, 2016 12:47 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பொறுத்தார் பூமியாள்வார் என்று சொல்வார்கள். அவர்களுக்கும் ஒரு குறை உண்டு. தங்களை சக்தியற்றவன் என்று உலகம் நினைக்கிறதே என்ற குறை தான் அது. அதை நினைத்து வருத்தப்பட தேவையில்லை.

* உண்மையை ஒரு பெண்ணரசிக்கு ஒப்பிடலாம். அவளது திருவடியை மனிதன் சரணடைய வேண்டும் உண்மை மட்டுமே பிறவி என்னும் கடலைக் கடக்க உதவும் ஓடமாகவும், இன்ப உலகம் என்னும் சொர்க்கத்தை அடைய உதவும் வாசற்படியாகவும் இருக்கிறது.

* பூக்களுக்கு தீங்கு நேராமல் வண்டு தேன் குடிப்பது போல, மக்களுக்கு ஊறு விளைவிக்காமல் வரிவசூல் செய்பவனே நல்லாட்சி புரியும் மன்னனாகத் திகழ்வான்.

* பணம் இல்லாதவனுக்கு மனதில் எழும் ஆசை முள் போன்றது. அது அவனது மனதையே குத்தி வேதனைப்படுத்தும்.

* முயற்சி இல்லாதவன் குடும்பவாழ்வு நடத்தும் தகுதியை இழக்கிறான். செயலில் ஆர்வம் காட்டும் சந்நியாசி துறவு இலக்கணத்தை மீறுகிறான்.

* பிறர் பொருளை அபகரிப்பது, பிறர் மனைவி மீது ஆசை கொள்வது, தன்னிடம் அன்பு வைத்தவரைப் புறக்கணிப்பது ஆகியவை ஒருவனை அழித்து விடும்.

* கீழான புத்தியுள்ளவர்கள், நிதானத்தை இழந்தவர்கள், சோம்பேறிகள், தற்பெருமை கொண்டவர்களுடன் ஆலோசனை செய்யக் கூடாது.

* சகோதரிகள், வயதான சகோதரர்கள், ஏழை எளியவர்கள், நண்பர்கள் ஆகியோரைக் காப்பாற்றும் பொறுப்பு இல்லறத்தில் வாழ்பவனுக்கு உண்டு.

* உண்மை பேசுதல், தர்மம் செய்தல், சுறுசுறுப்புடன் செயல்படுதல், பொறுமை, தைரியம், சகிப்புத்தன்மை இவை ஆறு நற்குணங்களையும் மனிதன் ஒருபோதும் கைவிடக் கூடாது.

* துன்பத்தில் மனம் தளராமலும், ஆபத்து காலத்தில் நிதானம் இழக்காமலும் விரைந்து செயலாற்றுபவனே வாழ்வில் வெற்றி பெறுவான்.

* உனக்கு மகிழ்ச்சி ஏற்பட்டால் துள்ளிக் குதிக்கத் தேவையில்லை. அதுபோல, பிறர் துன்பப்படுவது கண்டு மகிழவும் தேவையில்லை.

* தன்னை நம்பி இருப்பவர்களுக்கு பகிர்ந்து கொடுப்பதில் இன்பம் காண்பவனே நல்லவன். பகைவனுக்கும் நல்லதை எண்ணும் மனம் படைத்தவனே

உயர்ந்தவன்.

* தூய்மையான, எளிதில் ஜீரணமாகும் சத்தான உணவுகளை உண்பவன், எப்போதும் ஆரோக்கியம் உள்ளவனாக இருப்பான்.

* முயற்சி சிறிதாக இருந்தாலும், விளையக்கூடிய பயன் பெரிதாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட நற்செயல்களில் மனதைச் செலுத்துபவனே அறிஞன்.

* தர்மத்தை சத்தியமே தாங்கிப் பிடித்து உலகில் நிலைபெறச் செய்கிறது. ஒருவன் கற்ற வித்தைகள் இடைவிடாத பயிற்சியினால் நிலைநிறுத்தப்படுகிறது.

* ஒழுக்கம் மனிதனுக்கு உயிர் போன்றது. அது இல்லாவிட்டால் பணமும், உறவுகளும் அவனுக்கு உதவாது. வாகனம் இருந்தால் பயணம் மட்டுமே எளிதாகும். ஒழுக்கம் இருந்தால் உலகில் எல்லாமே எளிதாக அமையும்.

எச்சரிக்கிறார் விதுரர்






      Dinamalar
      Follow us