ADDED : டிச 20, 2019 03:30 PM

டிச.25 - ராஜாஜி நினைவு நாள்
* கண் விழித்ததும், ''கடவுளே... என் உள்ளம் என்னும் கோயிலைத் துாய்மையுடன் இருக்கச் செய்'' என வழிபடுங்கள்.
* துாங்கும் முன்,'' இன்று செய்த குற்றங்கள் இன்றோடு போகட்டும். மறுபடியும் அதைச் செய்யாதிருக்க அருள்புரிவாய்'' என வேண்டுங்கள்.
* கடவுள் எங்கேயோ இருப்பதாக நினைக்க வேண்டாம். நமக்கு அருகிலேயே இருக்கிறார். இதனை மனதில் நினைத்தால் நிம்மதியாக வாழலாம்.
* கடவுளை தாயாகக் கருதி வழிபடுவது சிறப்பு. தந்தை, குழந்தை வடிவத்திலும் வழிபடலாம்.
* தியானம் செய்ய நிற்கவோ, அமரவோ வேண்டாம். படுத்த நிலையிலும் செய்யலாம். மனம் ஒருமுகப்பட்டு இருந்தாலே போதும்.
* பலனை எதிர்பார்த்து பக்தி செலுத்தக் கூடாது. பேராசை, ஆணவத்தில் இருந்து மனதை காப்பவனே பக்திமான்.
* பக்தி ஆழமானதாக இருந்தால், ஆசாரக்குறைவு நம்மைப் பாதிக்காது. கடவுள் மீதுள்ள பக்தி உண்மையானதா, ஆழமானதா என நம்மை நாமே பரிசோதிக்க வேண்டும்.
* உள்ளம் உருகி வழிபட்டால் கடவுளின் அருள் நிச்சயம் கிடைக்கும்.
* பிறரைப் பார்த்து நாம் சிரித்தால், கடவுள் நம்மைப் பார்த்துச் சிரிக்கிறார். யாரிடமும் உயர்வு, தாழ்வு பாராட்டாதீர்.
* தவறுகளை திருத்திக் கொள்ள முயற்சிப்பதில் அவமானம் ஏதுமில்லை.
வேண்டுகிறார் ராஜாஜி