ADDED : ஜன 16, 2020 05:42 PM

* படித்தால் மட்டும் போதுமா...கடவுளின் திருவடிகளை வணங்காவிட்டால் படிப்பால் பயனில்லை.
* பொறாமை, ஆசை, கோபம், கடுஞ்சொல் தவிர்ப்பது தர்மமாகும். தர்மத்தால் வாழ்வில் நல்ல நிலையை அடையலாம்.
* நம்மால் முடிந்த தர்மச் செயல்களை செய்தால், வாழ்வில் உயர்வு உண்டாகும்.
* தர்மத்தால் வரும் இன்பம் நிலையானது. மற்ற வழிகளில் வரும் இன்பங்கள் நிலையற்றவை.
* ஒருவன் தன் வாழ்நாளில் அறச்செயல்களில் ஈடுபட வேண்டும். மறந்தும் பழியை தரும் செயல்களில் ஈடுபடக் கூடாது.
* மனிதனின் எண்ணமே செயலாகிறது. அந்தச் செயலே வாழ்வை தீர்மானிக்கிறது.
* விருப்பும், வெறுப்பும் இல்லாத கடவுளின் திருவடிகளை வணங்குபவர்களுக்கு எக்காலத்திலும் துன்பம் நேராது.
* கடவுளின் திருவடிகளை சேர்ந்தவர்களே பிறவிப் பெருங்கடலைக் கடந்து மோட்சம் அடைகின்றனர்.
* பக்தியின் முக்கிய நோக்கம் மனிதனை தர்மத்தின் பாதையில் செல்லத் துாண்டுவதே.
* பதவியும், பொருளும் புகழை உயர்த்தாது. ஒருவர் செய்த தர்மமே புகழை உயர்த்தும்.
* தர்ம வழியில் வாழ்பவர்களே ஞானிகள். கடவுளுக்கு நிகராக அவர்கள் மதிக்கப்படுவர்.
* அன்பும், தர்மமும் இணைந்தால் தான் குடும்ப வாழ்வே சிறக்கும்.
* தானம், விருந்தோம்பல், நட்பு பாராட்டுதல் ஆகியவையே தர்மத்தின் பண்புகளாகும்.
* உழைப்பின் மூலம் உடலுக்கான (வாழ்வதற்கான) சம்பளம் கிடைக்கும். அதுபோல, பிறர் மகிழ கொடுத்து உதவுதல், நற்செயலில் ஈடுபட்டு புகழ் பெறுதல் ஆகியவற்றால் ஆத்மாவுக்கு ஊதியம் கிடைக்கும்.
* பெற்ற தாயே பட்டினி கிடக்கும் சூழல் இருந்தாலும், மனிதன் தர்மத்தை மீறி நடப்பது கூடாது.
* அன்பும், பண்பும் நிறைந்த மனைவி அமைந்து விட்டால் இல்லாதது ஏதுமில்லை.
கேட்கிறார் திருவள்ளுவர்