sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

உலகம் ஆயிரம் சொல்லட்டுமே

/

உலகம் ஆயிரம் சொல்லட்டுமே

உலகம் ஆயிரம் சொல்லட்டுமே

உலகம் ஆயிரம் சொல்லட்டுமே


ADDED : அக் 20, 2023 05:35 PM

Google News

ADDED : அக் 20, 2023 05:35 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அக்.24 ஸித்தி தினம்

* உலகம் என்ன நினைக்கிறது என கவலைப்படாதே. உனது உள்ளம் என்ன நினைக்கிறது என்பதை கவனி.

* அறிவால் கடவுளை அடைய முடியாது. அவர் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவராக உள்ளார்.

* பொறுமை, நம்பிக்கை என்னும் இரு காணிக்கைகளையே கடவுள் உன்னிடம் எதிர்பார்க்கிறார்.

* எளிமையாக வாழ விரும்பு. கவுரவத்திற்காக ஆடம்பர செலவுகளை செய்யாதே.

* உண்மை எது, உண்மையற்றது எது என்பதை அறிந்து செயல்படுவதே விவேகம்.

* குழந்தைகளையும், பெண்களையும் அன்புடன் நடத்து.

* உடம்பை புறக்கணிக்க வேண்டாம். அதே நேரம் அளவுக்கு அதிகமாக பராமரிக்கவும் வேண்டாம்.

* கடவுள் மீது முழு கவனம் செலுத்தினால் துன்பத்தில் இருந்து விடுதலை கிடைக்கும்.

* உலகில் ரகசியம் என்று எதுவும் கிடையாது. அனைத்தையும் அறிபவராக கடவுள் இருக்கிறார்.

* வழிபாட்டுக்கு ஆடம்பரம் தேவையில்லை. பணிவும், அன்பும் நிறைந்த மனம் ஒன்றே போதும்.

* வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால் கடவுளை வணங்கு.

* உன்னிடம் பணம் எவ்வளவு இருந்தாலும், நீ செய்த வினைகளின் பயனை அனுபவித்தே ஆக வேண்டும்.

சொல்கிறார் ஷீரடி சாய்பாபா






      Dinamalar
      Follow us