sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

ஒன்றே குலமென்று பாடுவோம்

/

ஒன்றே குலமென்று பாடுவோம்

ஒன்றே குலமென்று பாடுவோம்

ஒன்றே குலமென்று பாடுவோம்


ADDED : ஏப் 29, 2013 02:00 PM

Google News

ADDED : ஏப் 29, 2013 02:00 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* அன்பால் மனதை அலங்கரித்தால், அகிலம் முழுவதையும் நம்மால் அரவணைக்க முடியும்.

* ஒருவரை மன்னிப்பதில் இருக்கும் இன்பம் பழிவாங்கும் உணர்வில் இருப்பதில்லை.

* பாவத்திற்கெல்லாம் தாய் வறுமையே. வறியவனிடம் பாவ புண்ணியத்தைப் பற்றிய பேச்சு எடுபடாது.

* 'கண்ணுக்கு கண்; பல்லுக்குப் பல்' என்று பழிக்குப் பழி வாங்கும் குணம் நல்லதல்ல.

* சோதனை நேரும் போது தான் மனிதன் பொறுமை, சகிப்புத்தன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

* கொல்லாமை மட்டுமே அகிம்சை என்று நினைக்கிறோம். எல்லா நல்ல செயல்களும் அகிம்சையில் தான் அடங்கும்.

* செல்வம் அதிகம் சேரும்போது மனிதன் பண்பு, தரம் குறைந்தவனாகி விடுகிறான்.

* பணம் சக்கரம் போல சுழன்று வரும் இயல்பு கொண்டது. எனவே, அதனை தர்ம வழியில் செலவிடுவதே அறிவுடைமை. பதவி, அதிகாரம், அந்தஸ்து என்று வாழ்வின் எந்த உயர்ந்த நிலைக்கும் இக்கருத்து பொருந்தும்.

* ஒருவன் வாழும் வாழ்க்கை அவனுக்கும், மற்றவர்களுக்கும் மகிழ்ச்சி தருவதாக இருக்க வேண்டும்.

* கட்டாயத்தின் பேரில் செய்யும் உதவியைத் தொண்டு எனக் கூற முடியாது. மனம் உவந்து செய்வதே தொண்டு.

* பொருள் இல்லாதவர்களும் தொண்டாற்ற முன் வரலாம். அவரவர் தகுதிக்கு உட்பட்ட நற்செயல்களை அவர்கள் செய்யலாம்.

* மனிதகுலம் முழுவதும் ஒன்றே. இதைத்தான் 'உலகமே ஒரு சிறிய கிராமம்' என்றார் ஆங்கிலக்கவிஞர் கோல்ட்ஸ்மித். நமக்கு கடவுளும் ஒருவனே. இந்த உணர்வை நாம் பெற்று விட்டால் உலகம் நன்மை பெறும்.

* பிறருக்கு நன்மை செய்யும் வாய்ப்பு கிடைத்தால் அதைத் தவற விட்டு விடாதீர்கள்.

* ஏழைக்குக் கடன் கொடுத்தவன் கடவுளுக்கே கடன் கொடுத்தவன் ஆகிறான். அவனுக்கு ஆண்டவன் அவற்றைப் பல மடங்கு திருப்பிக் கொடுப்பான் என பைபிள் வலியுறுத்துகிறது.

* மற்ற மனிதர்களிடமும், உயிர்களிடமும் கருணை காட்டுபவன் இறைவனுடன் தொடர்பு கொள்ளும் தகுதியைப் பெறுகிறான்.

* வாழ்வில் மனிதநேயத்தைப் பின்பற்றி நடப்பவர்கள் பெரிய வெற்றியைப் பெற்று மகிழ்வார்கள்.

* நாம் ஒருவருக்கொருவர் துணையாக வாழ வேண்டுமே தவிர, யாருக்கும் தொந்தரவு தருபவர்களாக இருக்கக் கூடாது.

* பண்புகளின் மணிமுடியாகத் திகழ்வது மனிதநேயம். அனைவரும் கடவுளின் குழந்தைகள் என்ற எண்ணம் வலுப்பெற்று விட்டால் மனதில் மனிதநேயம் மலரத் தொடங்கி விட்டது என்று பொருள்.

* மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் சிந்தனை ஆற்றல் உண்டு. அதைச் சரியான வழியில் செலுத்துவது மட்டுமே ஆசிரியர்களின் பணி.

ஒற்றுமைக்கு வித்திடுகிறார் கமலாத்மானந்தர்






      Dinamalar
      Follow us