
பிப்.18 - பிறந்த நாள்
* ஆசைகளை குறைத்தால் சந்தோஷமாக வாழலாம்.
* மனதில் இருப்பதை உனது கண்களே பிறருக்கு தெரியப்படுத்திவிடும்.
* ஆராய்ச்சி செய்தால் கடவுளை அறிய முடியாது.
* தீயவர்களுக்கு உதவி செய்யாதே. அது பாவத்திற்கு சமம்.
* காலையில் திருப்தியாகவும், இரவில் குறைவாகவும் சாப்பிடு.
* துன்பத்தை ஏற்றுக்கொள். பொன் போல ஒளிர்வாய்.
* ஒருவரை நம்பினால் அவரது வார்த்தையில் நம்பிக்கை வை.
* ஒரு செயலை தொடங்கினால் அதை முழுமையாக முடி.
* படிப்பதை விட ஒரு விஷயத்தை கேட்டால் மனதில் நன்றாக பதியும்.
* பிறருடைய குணத்தை பற்றி பேசி, நேரத்தை வீணாக்காதே.
* ஒருவர் செய்வதை பார்த்து அப்படியே செய்யாதே. உனக்கு தெரிந்ததை செய்.
* பேசுவதை விட அதிகமாக கேளு. கேட்பதை மனதில் நிறுத்து.
* தொடர்ந்து பயிற்சி செய். முயற்சியில் வெற்றி பெறுவாய்.
* உள்ளத்தில் ஒன்றும் உதட்டில் ஒன்றுமாக செயல்படாதே.
* பலனை எதிர்பார்த்து அன்பு செலுத்தாதே.
* ஆசையற்ற ஞானிகள் மீண்டும் பிறப்பதில்லை.
என்கிறார் ராமகிருஷ்ணர்

