sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

நாராயணபுரம் செல்வப்பிள்ளை!

/

நாராயணபுரம் செல்வப்பிள்ளை!

நாராயணபுரம் செல்வப்பிள்ளை!

நாராயணபுரம் செல்வப்பிள்ளை!


ADDED : ஏப் 22, 2011 02:36 PM

Google News

ADDED : ஏப் 22, 2011 02:36 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'என் செல்வப்பிள்ளையே' என்று ராமானுஜர் உருகிப் போற்றிய பெருமாள் கர்நாடகா திருநாராயணபுரத்தில் கோயில் கொண்டிருக்கிறார். இங்குள்ள மலைக்கோட்டையில் யோக நரசிம்மர் தியானநிலையில் வீற்றிருக்கிறார்.

தல வரலாறு: மகாவிஷ்ணுவிடம் பிரம்மா ஒரு அர்ச்சாமூர்த்தியை (விஷ்ணு விக்ரகம்) பெற்றார். அதை தன் மகன் சனத்குமாரருக்கு கொடுத்தார். பூலோகம் வந்த சனத்குமாரர், திருநாராயணபுரத்தில் அதை பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.

செல்வப்பிள்ளை: ஸ்ரீதேவி, பூதேவியோடு கூடிய உற்சவர் செல்வநாராயணரை இங்கு காணலாம். ராமபிரான் தனது பட்டாபிஷேகத்தின்போது, விபீஷணருக்கு, தான் வழிபட்ட ரங்கநாதர் விக்ரகத்தை கொடுத்து விட்டார். இதனால், பிரம்மாவிடம் இருந்து செல்வநாராயணர் விக்ரகத்தை பெற்று வந்து வழிபட்டார். சிறிது காலம் கழித்து, தனது மகன் குசனிடம் கொடுத்து விட்டார். குசன் தனது மகள் கனகமாலினியை யதுகுல மன்னனான யதுசேகரனுக்கு திருமணம் செய்து வைத்தார். அப்போது சீதனமாக இந்த விக்ரகத்தை கொடுத்துவிட்டார்.

யது வம்சத்தில் வந்த பலராமர், துவாரகையில் இருந்து தெற்கு நோக்கி தீர்த்தயாத்திரை வந்தார். நாராயணபுரம் வந்த அவர் அங்கிருந்த நாராயணர் விக்ரகமும், துவாரகையில் இருக்கும் செல்வநாராயணர் விக்ரகமும் ஒன்றுபோலிருப்பதைக் கண்டார். மீண்டும் ஒருமுறை இதே தலத்துக்கு கிருஷ்ணருடன் வரும்போது, துவாரகையில் இருந்த செல்வ

நாராயணர் விக்ரகத்தை எடுத்து வந்தார். அதை இந்த தலத்தில் பிரதிஷ்டை செய்தார்.

பத்ரி சென்ற புண்ணியம்: மூலவர் திருநாராயணர் மேற்கு நோக்கி, சங்கு, சக்கரத்துடன் நிற்கிறார். ஒரு கையில் கதாயுதம் உள்ளது. 'பத்ரி' என்னும் இலந்தை மரமே இங்கு தலவிருட்சம். திருநாராயணப் பெருமாளை தரிசித்தவர்கள் பத்ரிநாத் சென்றுவந்த புண்ணியத்தை அடைவர்.

பெருமாளையே கணவராக எண்ணி வாழ்ந்த வரதநந்தினி என்னும் பெண் மூலவரின் பாதத்தில் வீற்றிருக்கிறாள். சாண்டில்ய மகரிஷி இத்தலத்தில் தவமிருந்து பெருமாளை பத்ரிநாராயணராகத் தரிசிக்கும் பேறு பெற்றார்.

பேசும் ராமானுஜர்: ஸ்ரீரங்கம், ஸ்ரீபெரும்புதூர், திருக்கோஷ்டியூரில் ராமானுஜருக்கு முக்கியத்துவம் இருப்பது போன்று, திருநாராயணபுரத்திலும் உண்டு. இங்கு ராமானுஜர் <உபதேச முத்திரையுடன் காட்சி தருகிறார். தன்னை நாடிவரும் பக்தர்களின் குறைகளைக் கேட்டு நிவர்த்திசெய்யும் பாவனையில் இருப்பதால் இவரை 'பேசும் யதிராஜர்(ராமானுஜர்) என்று சொல்கின்றனர். புதர்கள் மண்டிக் காடாக இருந்த இத்தலம், ராமானுஜர் காலத்தில் சீர்திருத்தம் செய்யப்பட்டது. இதற்கு, விஷ்ணுவர்த்தனன் என்னும் மன்னன் பொருளுதவி செய்திருக்கிறான்.

உடையவர் தாலாட்டு: ஜெயந்தி விழாவில் ராமானுஜர், செல்வநாராயணர் விக்ரகத்தை தாலாட்டுவது போல பாவனை செய்து அர்ச்சகர்கள் பாடுவர். இதற்கு 'உடையவர் தாலாட்டு' என்று பெயர். அபிநயத்தோடு பாடும் இத்தாலாட்டு கேட்பதற்கு இனிமையாக இருக்கும். பெருமாளின் திருக்கல்யாண வைபவத்தில் திருநாராயணரும், யதுகிரித்தாயாரும் பவனிவரும்போது, ராமானுஜரும் மணமக்களைப் பின்தொடர்ந்து வருகிறார். இந்நிகழ்ச்சி, ராமாவதாரத்தில் சீதாராமரைத் தொடர்ந்து வந்த லட்சுமணரைக் குறிப்பதாக உள்ளது. யதுகிரிதாயார் தாமரை மலரைக் கையில் ஏந்தி நிற்கிறாள். உற்சவருக்கு 'செல்வநாயகி' என்பது திருநாமம்.

மலைக்கோட்டை நரசிம்மர்: திருநாராயணபுரத்தில் உள்ள மலைக்கோட்டையில் யோகநரசிம்மர் உள்ளார். மகாவிஷ்ணு பிரகலாதனுக்காக நரசிம்மராக வந்து இரண்யனைக் கொன்றார். தன் தந்தை இறக்க காரணமாக இருந்ததால் பிரகலாதனுக்கு பிதுர்ஹத்ய தோஷம் உண்டானது. அதனைப் போக்குவதற்கு விஷ்ணுவை நோக்கி தவத்தில் ஆழ்ந்தார். அவருக்கு நரசிம்மர் யோகநிலையில் காட்சியளித்தார். அவர் தனக்கு தந்த காட்சியைப் போல் சிலைவடித்த பிரகலாதன், அதை அங்கு பிரதிஷ்டை செய்தார்.

படியேறினால் பலன்: கல்யாணி தீர்த்தத்தில் இருந்து 400 படிகள் ஏறினால் மலைக்கோட்டை யோகநரசிம்மர் கோயிலை அடையலாம். இவரிடம், என்ன வேண்டினாலும் ஓர் ஆண்டிற்குள் நிறைவேற்றி வைப்பார். இவரது சந்நிதிக்குச் செல்ல ஒன்பது படிக்கட்டுகள் உள்ளன. யோகநரசிம்மரின் கட்டளைப்படி நவக்கிரகங்கள் இங்கு படிகளாக இருப்பதாக ஐதீகம்.

நரசிம்மரைத் தரிசித்தவர்க்கு கிரகதோஷம் அனைத்தும் நீங்கிவிடும் என்பது ஐதீகம். மலையில் ராமானுஜரின் பாதம் உள்ளது. இங்குள்ள கல்யாணி தீர்த்தம், வராக அவதாரத்தின் போது உருவானது. மாசிமாதத்தில் கங்கை இந்த தீர்த்தத்துக்கு வருவதாக ஐதீகம் என்பதால், அப்போது இங்கு நீராடுவர். தீர்த்தக்கரையில் பிந்துமாதவன், நாராயணன், லட்சுமிநரசிம்மர், மாருதி சந்நிதிகள் உள்ளன.

திருவிழா: பங்குனியில் பிரம்மோற்ஸவம், நரசிம்ம ஜெயந்தி, ராமானுஜர் ஜெயந்தி, பங்குனி பூசத்தில் வைர முடிசேவை

இருப்பிடம்: மைசூருவில் இருந்து 70 கி.மீ., தூரத்தில் திருநாராயணபுரம் மலைக்கு செல்லவும் வாகனவசதி உண்டு.

திறக்கும்நேரம்:நாராயணபுரம்: காலை8.30- மதியம் 1.30மணி, மாலை4- 6மணி, இரவு7-9மணி. மேல்கோட்டை மலைக்கோயில்:காலை9.30- மதியம்2மணி, மாலை5- இரவு8மணி

போன்: 08236-299 839.






      Dinamalar
      Follow us