sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

முயற்சி இருந்தால் முடியாதது எதுவுமில்லை!

/

முயற்சி இருந்தால் முடியாதது எதுவுமில்லை!

முயற்சி இருந்தால் முடியாதது எதுவுமில்லை!

முயற்சி இருந்தால் முடியாதது எதுவுமில்லை!


ADDED : ஜூன் 09, 2017 02:05 PM

Google News

ADDED : ஜூன் 09, 2017 02:05 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* எப்போதும் சுறுசுறுப்புடன் இருங்கள். முயற்சி இருந்தால் முடியாதது எதுவுமில்லை.

* எந்த இடத்தில் இருந்தாலும் மகிழ்ச்சியாக இருங்கள். சுற்றியுள்ளவர்களின் மகிழ்ச்சிக்கும் துணை நில்லுங்கள்.

* யாரையும் எதிர்பார்த்துக் காத்திருக்காதீர்கள். சுயகாலில் நிற்கப் பழகுங்கள்.

* உலகை விட்டுச் செல்லும் போது மனிதன் அழுகிறான். ஆனால், மகான்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.

* உலகில் கடவுள் மட்டுமே உண்மை. மற்ற அனைத்தும் பொய். இந்த உண்மையை உணர்ந்தவனுக்கு மகிழ்ச்சி தவிர வேறு ஏதுமில்லை.

* துறவிக்கு பணத்தை வெறுக்கும் சக்திஇருக்கும். மற்றவர்கள் பணத்தால் பொம்மை போல ஆட்டி வைக்கப்படுகிறார்கள்.

* கஷ்டங்கள் நீடிப்பதில்லை. ஓடும் நீரைப் போல ஓடி மறைந்து விடும்.

* துன்பம் என்பது கடவுளின் பிரசாதம். அது நம்மை நல்வழிப்படுத்தவே வழங்கப்படுகிறது.

* நட்பு என்பது ஒருவருக்கொருவர் பொழுதுபோக்க அல்ல. தேவையான சமயத்தில் எச்சரித்து திருத்தும் கடமையும் நட்பிற்கு இருக்கிறது.

* கல்வியால் மனிதன் தானும் மேன்மை அடையலாம். மற்றவர்களையும் மேன்மை அடையச் செய்யலாம்.

* மனதை அடக்கப் பழகுங்கள். பிறரது அந்தரங்கம் பற்றி அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டாதீர்கள்.

* ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவராக கடவுள் இருக்கிறார். அறிவைக் கொண்டு அவரை அளக்க முற்படாதீர்கள்.

* மதம் பிடித்த யானை போல மனம் செயல்படுகிறது. தியானத்தால் அதைக் கட்டுப்படுத்த முடியும்.

* கடவுளின் திருநாமத்தை தினமும் ஜெபியுங்கள். வாழ்வில் எல்லா நன்மையும் கிடைக்கப் பெறுவீர்கள்.

* தெய்வ வழிபாட்டுக்கு உரிய நேரம் எதுவானாலும் மனம் ஒன்றி வணங்குவது அவசியம். ஒருநாள் கூட இதை மறக்காதீர்கள்.

* தூய்மையான மனம் படைத்தவர்கள் உலகில் உள்ள அனைத்தையும் தூய்மையாக பார்க்கிறார்கள். அவர்களின் சொல்லும், செயலும் எல்லாருக்கும் நன்மையளிக்கும்.

சொல்கிறார் சாரதாதேவியார்






      Dinamalar
      Follow us