sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

மலர்ந்த முகமே வாழ்வின் இன்பம்!

/

மலர்ந்த முகமே வாழ்வின் இன்பம்!

மலர்ந்த முகமே வாழ்வின் இன்பம்!

மலர்ந்த முகமே வாழ்வின் இன்பம்!


ADDED : நவ 21, 2019 02:28 PM

Google News

ADDED : நவ 21, 2019 02:28 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

1926 நவ.23ல் ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் சாய்பாபா அவதரித்தார். 2011 ஏப்.24ல் ஸித்தியடைந்தார். புட்டபர்த்தியில் உள்ள யஜுர் ஆஸ்ரமத்தில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

* பொறுமை மிக்கவர் வாழ்வில் ஏற்றம், இறக்கம் ஏற்பட்டாலும் அவர்களின் முகம் எப்போதும் மலர்ச்சியுடன் இருக்கும். அதுவே வாழ்வின் இன்பமாகும்.

* வெறுப்பு, பயம் இருக்குமிடத்தில் கூச்சல் இருக்கும். ஆணவம் உள்ள இடத்தில் தற்பெருமை இருக்கும். அன்பு இருக்குமிடத்தில் அமைதி இருக்கும்.

* கருணையுள்ளவர்கள் மட்டுமே பிறர் மீது அன்பு செலுத்துவர். சாதிக்க முடியாததையும் பொறுமை சாதிக்கும்.

* பிறர் பாராட்டும் போது பெருமிதமோ, திட்டும் போது வருத்தமோ கொள்ளாதீர்கள்.

* பக்தியில் ஈடுபடும் போது தான் சமுதாயம் முழுமை பெறும்.

* இளமைக்காலம் என்பது முக்கிய காலகட்டம். அதை நல்வழிப்படுத்துவதில் பெரும் பங்கு, பெற்றோரைச் சேரும்.

* ஓய்வு நேரத்தை தியானம் செய்யவும், சேவை செய்யவும் பயன்படுத்துங்கள்.

* எதிர்பார்ப்பும், பேராசையும் பெருந்துன்பம் தரும்.

* செய்யும் நற்செயல், தீயசெயல்களுக்கான பலன் எதிர்காலத்தில் நம்மை வந்தடையும்.

* உடலுக்கு உணவு சக்தி தருவது போல தனிமனித அமைதியே உலகிற்கு சக்தி தருகிறது.

* உயிர்களின் பசிப்பிணியை போக்குவது நம் கடமை.

* மனிதநேயம் கொண்டவர் மனதில் எப்போதும் மகிழ்ச்சி குடியிருக்கும்.

* மனிதராகப் பிறந்ததே பக்தியின் மூலம் கடவுளை அடையத் தான்.

* சேவை மூலம் அன்பு வெளிப்படுவதோடு அது எங்கும் பரவுகிறது.

சொல்கிறார் சாய்பாபா






      Dinamalar
      Follow us