ADDED : நவ 21, 2019 02:28 PM

1926 நவ.23ல் ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் சாய்பாபா அவதரித்தார். 2011 ஏப்.24ல் ஸித்தியடைந்தார். புட்டபர்த்தியில் உள்ள யஜுர் ஆஸ்ரமத்தில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
* பொறுமை மிக்கவர் வாழ்வில் ஏற்றம், இறக்கம் ஏற்பட்டாலும் அவர்களின் முகம் எப்போதும் மலர்ச்சியுடன் இருக்கும். அதுவே வாழ்வின் இன்பமாகும்.
* வெறுப்பு, பயம் இருக்குமிடத்தில் கூச்சல் இருக்கும். ஆணவம் உள்ள இடத்தில் தற்பெருமை இருக்கும். அன்பு இருக்குமிடத்தில் அமைதி இருக்கும்.
* கருணையுள்ளவர்கள் மட்டுமே பிறர் மீது அன்பு செலுத்துவர். சாதிக்க முடியாததையும் பொறுமை சாதிக்கும்.
* பிறர் பாராட்டும் போது பெருமிதமோ, திட்டும் போது வருத்தமோ கொள்ளாதீர்கள்.
* பக்தியில் ஈடுபடும் போது தான் சமுதாயம் முழுமை பெறும்.
* இளமைக்காலம் என்பது முக்கிய காலகட்டம். அதை நல்வழிப்படுத்துவதில் பெரும் பங்கு, பெற்றோரைச் சேரும்.
* ஓய்வு நேரத்தை தியானம் செய்யவும், சேவை செய்யவும் பயன்படுத்துங்கள்.
* எதிர்பார்ப்பும், பேராசையும் பெருந்துன்பம் தரும்.
* செய்யும் நற்செயல், தீயசெயல்களுக்கான பலன் எதிர்காலத்தில் நம்மை வந்தடையும்.
* உடலுக்கு உணவு சக்தி தருவது போல தனிமனித அமைதியே உலகிற்கு சக்தி தருகிறது.
* உயிர்களின் பசிப்பிணியை போக்குவது நம் கடமை.
* மனிதநேயம் கொண்டவர் மனதில் எப்போதும் மகிழ்ச்சி குடியிருக்கும்.
* மனிதராகப் பிறந்ததே பக்தியின் மூலம் கடவுளை அடையத் தான்.
* சேவை மூலம் அன்பு வெளிப்படுவதோடு அது எங்கும் பரவுகிறது.
சொல்கிறார் சாய்பாபா