
* கடமையில் கவனத்தை செலுத்து. அதுவே அமைதிக்கான வழி.
* குறைகளை சரிசெய்ய பாருங்கள். முடியாவிட்டால் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளுங்கள்.
* நல்ல எண்ணம் இருந்தால் மட்டுமே ஒழுக்கமுடன் வாழ முடியும்.
* தனக்கென வாழாமல் பிறருக்காக வாழ்பவர் உயர்ந்த மனிதன்.
* பொறுப்பைத் தட்டிக் கழிக்காதீர்கள். தப்பிக்க நினைத்தால் அமைதியை இழப்பீர்கள்.
* எளிமையாக வாழ்ந்தாலும் சிந்தனையில் உயர்ந்தவராக இருங்கள்.
* அதிகாலையில் எழுந்ததும் கடவுளை வணங்குவது அன்றாட கடமை.
* உங்கள் மீது குற்றம் சுமத்துபவர் மீதும் நன்றியுள்ளவர்களாக இருங்கள்.
* சத்திய வழியில் நடப்பதும், இடையூறுகளை எதிர்த்து வெல்வதும்தான் வாழ்க்கை.
* ஒரு மனிதன் தன்னைப் பற்றி அறிவதற்கு நீண்ட கால போராட்டம் தேவை.
* வேதத்தை படித்தால் மட்டும் போதாது. அதை வாழ்வில் பின்பற்ற வேண்டும்.
* மனஉறுதியுடன் இருங்கள். இல்லாவிட்டால் பேராசை என்னும் நெருப்பு சுடும்.
* கடவுள் உங்களை எந்த நிலையில் வைத்திருந்தாலும் கவலைப்படாதீர்கள்.
* எவ்வளவு வேகமாக ஆணவம் அழிகிறதோ அந்தளவுக்கு தெய்வீகம் வெளிப்படும்.
காட்டுகிறார் சிவானந்தர்