ADDED : ஏப் 24, 2020 09:55 AM

ஏப். 24 சாய்பாபா ஸித்தி தினம்
* அன்பே சிறந்த முதலீடு. எவ்வளவு அன்பை முதலீடு செய்கிறீர்களோ, அதற்கேற்ப மகிழ்ச்சி என்னும் லாபம் கொழிக்கும்.
* தர்ம சிந்தனையுடன் வாழ்பவர்களின் இறுதிக் காலம் மகிழ்ச்சியாக அமையும்.
* பிறருக்கு உதவுவதும், பொறாமையை விலக்குவதும் சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும்.
* சுயமாக யோசிக்க தெரியாதவனிடம் கூறும் அறிவுரை ஓட்டைப் பானையில் நீர் நிரப்புவதற்குச் சமம்.
* பஞ்சபூதங்களால் ஆன இயற்கையை பாழ்படுத்தினால், உடம்பிலுள்ள ஐம்புலன்களின் துாய்மையைக் கடவுள் அழிப்பார்.
* விருப்பு, வெறுப்பு இன்றி எளிய மக்களிடம் அன்பு காட்டுவதே மேலான பக்தி.
* பக்தியும், தளராத மன உறுதியும் கொண்டவனால் நாட்டுக்கே நன்மை ஏற்படும்.
* உயரப் பறந்தாலும் பறவை ஓய்வடுக்க மரக்கிளையை நாடும் பறவை போல அறிவு படைத்தவனும் அமைதி பெற கடவுளைத் தான் தேட வேண்டும்.
* பிறருடைய கருத்துக்கு மதிப்பளித்து அதில் குறுக்கிடாமல் இருப்பதே ஒருவரது மேலான பண்பாகும்.
* ஆசைகளை அடக்கியும், உணர்ச்சிகளை கட்டுப்படுத்தியும் நேர்வழியில் நடப்பதற்கு மதம் உதவுகிறது.
* உண்மையான கல்வி என்பது விவேகம், நல்ல அறிவைத் தருவதாக அமைய வேண்டும்.
* சமூகத்தில் ஒற்றுமை, அமைதியை வளர்க்க வேண்டியது மதங்களின் கடமையாகும்.
சொல்கிறார் சாய்பாபா