sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

விஸ்வரூப ஆஞ்சநேயர்

/

விஸ்வரூப ஆஞ்சநேயர்

விஸ்வரூப ஆஞ்சநேயர்

விஸ்வரூப ஆஞ்சநேயர்


ADDED : ஜன 06, 2013 04:27 PM

Google News

ADDED : ஜன 06, 2013 04:27 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி அருகிலுள்ள பாப்பஞ்சாவடி பஞ்சவடியில் 36 அடி <உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார்.

தல வரலாறு:





பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, இப்பகுதியில் சித்தர்களும், முனிவர்களும் தவம் செய்து வந்துள்ளனர். இதன் அடிப்படையில், இங்கு ஆஞ்சநேயர் கோயில் திருப்பணி ஆரம்பிக்கப் பட்டது. சிலை அமைக்க 150 டன் எடையுள்ள கருங்கல், செங்கல்பட்டு அருகேயுள்ள சிறுதாமூரில் கிடைத்தது. இதைக்கொண்டு மகாபலிபுரம் அருகேயுள்ள கேளம்பாக்கத்தில் முத்தையா ஸ்தபதி பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலையை உருவாக்கினார்.

சிலை பிரதிஷ்டைக்கு முன்பாக 11 கிலோ எடையுள்ள யந்திரம் தயார் செய்து அதை திருப்பதி, காஞ்சிபுரம், சிருங்கேரி, அஹோபிலம் ஆகிய புண்ணியத்தலங்களுக்கு கொண்டு சென்று பூஜை செய்தனர். ஆஞ்சநேயரின் சிலைக்கு அடியில் வைத்து ஜுன் 12, 2003ல் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த ஆஞ்சநேயருக்கு'ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர்' என்று பெயர் சூட்டப்பட்டது.

பஞ்சமுக தத்துவம்: ஆயுதம் இழந்த ராவணனிடம் ராமர், 'இன்று போய் நாளை வா' என்றார். ராமர் இவ்வாறு செய்தது தன்னை திருத்துவதற்குத்தான் என்பதை ராவணன் உணரவில்லை. 'மயில் ராவணன்' என்ற மற்றொரு அசுரனது துணையுடன் மீண்டும் போருக்கு கிளம்பி னான். ராமரை அழிப்பதற்காக மயில் ராவணன் கொடிய யாகத்தை நடத்த திட்டமிட்டான்.

அப்போது ஆஞ்சநேயர், நரசிம்மர், ஹயக்கிரீவர், வராகர், கருடன் ஆகியோரை வணங்கி அவர்களின் சக்தியையும், முகங்களையும் பெற்றார். பஞ்சமுகத்துடன் வந்து மயில் ராவணனை அழித்தார்.

தல சிறப்பு: பஞ்சவடி ஆஞ்ச நேயரை வழிபடுபவர்களுக்கு நரசிம்மரின் அருளால் எடுத்த செயல்களில் வெற்றியும், லட்சுமி கடாட்சமும் உண்டாகும். ஹயக்கிரீவரின் அருளால் அறிவாற்றல், வராகரின் அருளால் மனத்துணிவும் ஏற்படும். கருடனின் அருளால் நோய்கள் தீரும். வானர முகத்தின் அருளால் மன அமைதி கிடைக்கும்.

கோயில் அமைப்பு: 12 ஏக்கர் பரப்பில் தெற்கு பார்த்து கோயில் அமைந்துள்ளது. விநாயகருக்கும், சீதா, ராமர், மற்றும் அவரது சகோதரர்களுக்கும் சந்நிதி உள்ளது. மூலவருக்கு மேல் 118 அடி உயர விமானம், அதன் மீது 5 அடி உயர கலசம் இருக்கிறது. இவருக்கு அபிஷேகம் செய்ய 1008 லிட்டர் பால் தேவை. இங்கு 1200 கிலோ எடையுள்ள மணி உள்ளது. இதனை ஒலித்தால் 8 கி.மீ. தூரம் ஒலி கேட்கும். 18 மீட்டர் அகலமும், 40 மீட்டர் ஆழமும் கொண்ட தீர்த்தக்கிணறும் இருக்கிறது.

ராமர் பாதுகை: இக்கோயிலில் ராமரின் பாதுகைகள் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டுள்ளன. சுமார் 100 ஆண்டு பழமையான சந்தன மரத்தால் செய்யப்பட்டது. இதற்கு 1.25 கிலோ எடையுள்ள தங்க கவசம் சாத்தப்பட்டுள்ளது.

மிதக்கும் கல்: சீதையை மீட்பதற்காக ராமர், ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கை சென்றபோது, சேது சமுத்திரத்தில் பாலம் அமைக்கப்பட்டது. நளன், நீலன் என்ற வீரர்கள் இந்த பாலப்பணியை நடத்தினர். இதில் நளன், தேவசிற்பியான விஸ்வகர்மாவின் மகன். விஸ்வகர்மா தன் மனைவிக்கு,''என்னைப்போலவே உனக்கொரு மகன் பிறப்பான். எனக்குரிய திறமை அனைத்தும் அவனிடமும் இருக்கும்,''என வரம் கொடுத்தார். இதனால், இவனால் கடலிலும் பாலம் கட்ட முடிந்தது. மிதக்கும் கல்லின் ஒரு பகுதி தரிசனத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. எட்டு கிலோ எடையுள்ள இந்தக்கல்லை தண்ணீர் நிறைந்த பாத்திரத்தில் இட்டு பூக்களால் அலங்கரித்துள்ளார்கள்.

லட்டு லிங்கம்: ஆஞ்சநேயர் சிவனின் அம்சம் என்பதற்கேற்ப இக்கோயிலில் 'லட்டு லிங்கம்' செய்து பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்பட்டது. வரும் 8ம் தேதி இங்கு அனுமன் ஜெயந்தி விழா துவங்குகிறது. 9ம் தேதி துவங்கும் லட்சார்ச்சனை 12 வரை நடக்கிறது.

திறப்பு நேரம்: காலை 7 - இரவு 8.

இருப்பிடம்: புதுச்சேரியிலிருந்து (10 கி.மீ) திண்டிவனம் செல்லும் வழியில் பஞ்சவடி அமைந்துள்ளது.

போன்: 94425 02446, 0413 - 267 1232, 267 8823.






      Dinamalar
      Follow us