ADDED : நவ 08, 2019 09:24 AM

* வாழ்க்கையை லாப, நஷ்டக் கணக்கு பார்க்கும் வியாபாரமாக கருதக் கூடாது. பிறர் நலனுக்காக உதவி செய்ய வேண்டும்.
* தாயாகிய பூமி நம் விருப்பம் அனைத்தையும் அளிக்க தயாராக இருக்கிறாள். அவளைக் காப்பது நம் கடமை.
* தந்தையாகிய கடவுள் சகலரிடமும் கருணை காட்டுகிறார். அவரை வணங்குங்கள்.
* சமையலுக்காக அரிசி எடுக்கும் போது, ஒரு கைப்பிடியை தர்மம் செய்ய எடுத்து வைக்க வேண்டும்.
* எப்போதும் மனதை ஏதாவது ஒரு நற்பணியில் செலுத்தினால் சித்த சுத்தி என்னும் உயர்ந்த நிலை உண்டாகும்.
* எடுத்துச் சொல்வதைவிட, எடுத்துக்காட்டாக வாழ்வதே மதிப்பு மிக்கது.
* அன்பினால் பிறரது குற்றத்தை திருத்தும் போது மட்டுமே நிலையான பலன் கிடைக்கும்.
* தேவைகள் அதிகரித்துக் கொண்டே சென்றால் பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
* இரவு துாங்கும் முன் அன்றன்று நடந்த நன்மை, தீமைகளை மனதில் அலசி ஆராயுங்கள்.
* நல்ல விஷயத்தில் மட்டுமே கவனம் செலுத்தினால், மனம் துாய்மையாக இருக்கும்.
கேட்கிறார் காஞ்சிப்பெரியவர்