ADDED : பிப் 20, 2023 11:03 AM

* தர்மம் உள்ள இடத்தில் கடவுள் இருப்பார்.
* தர்மம் வகுத்த வழியில் பணம் தேடு. வேதம் விதித்த வழியில் வாழ்க்கை நடத்து.
* கடவுளை சரணடைவதே கல்வி கற்றதன் பயனாகும்.
* பேராசையை கைவிடு. இல்லையென்றால் அது உன் அறிவை அழித்துவிடும்.
* தர்மத்தில் நம்பிக்கை கொள். அப்போதுதான் உனக்கு வாழ்வில் பிடிப்பு ஏற்படும்.
* ஒழுக்கமுள்ள வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் நற்கதி உண்டு.
* உழைத்த பணத்தில் தர்மம் செய்தால், நல்ல வாழ்க்கை காத்திருக்கும்.
* வீணாக பேசாமல் கடவுளின் பெயரைச் சொல்.
* பிறவிக் குணம் என்பது எப்போதும் ஒருவரை விட்டு அகலவே அகலாது.
* வேதாந்தத்தம் என்பது உண்மை. அதை அடக்கம் எனவும் கூறலாம்.
* புத்தியால் மனதை அடக்கினால், வெற்றி உறுதி.
* கோபத்தை கைவிட்டால் துன்பமே வராது.
* புலன்களின் கவர்ச்சி அறிஞர்களைக்கூட தடுமாறச் செய்துவிடும்.
* பிறருடைய குற்றத்தை மன்னிப்பவன் மனிதன். அதை மறப்பவன் தன்னை தெய்வநிலைக்கு உயர்த்திக் கொள்கிறான்.
சொல்கிறார் வியாசர்

