sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

யாரிடமும் கை நீட்ட மாட்டேன்

/

யாரிடமும் கை நீட்ட மாட்டேன்

யாரிடமும் கை நீட்ட மாட்டேன்

யாரிடமும் கை நீட்ட மாட்டேன்


ADDED : மே 11, 2018 02:15 PM

Google News

ADDED : மே 11, 2018 02:15 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கடவுளே! உன்னிடம் சுகபோகம், மோட்சம் எதையும் கேட்கவில்லை. பக்தியை மட்டும் தானமாக கொடு; வேறு யாரிடமும் நான் கைநீட்ட மாட்டேன்.

* கடவுள் ஒருவர் மட்டுமே. அவரே எல்லா உயிர்களிலும் நிறைந்திருக்கிறார். அப்படி இருக்கும் போது, அவரை ''என் கடவுள் வேறு; உன் கடவுள் வேறு'' என்று பிரித்துப் பார்ப்பது வேண்டாத வேலை.

* பூஜை, சேவை, விரதம், நியமம் எல்லாம் வெறும் விளையாட்டுக்களே. கடவுளை உள்ளத்தால் தொட வேண்டும். அவனுடைய திருநாமத்தை மனம் கசிந்து ஜபிக்க வேண்டும்.

* கனவில் முனங்கினாலும், கடவுள் பெயரைச் சொல்லும் அளவுக்கு அவரது திருநாமம் மனதில் பதியட்டும். அப்படிப்பட்ட நல்லவர்களின் பாதங்களுக்கு என் தோல் செருப்பாகட்டும்.

* உடலளவில் துறவியாக மாற அனைவராலும் எளிதில் முடியும். ஆனால், மனதளவில் மாறுவது என்பது கடினமான செயல்.

* பணம், பொன், பெண் போன்ற உலக இன்பங்களை புறக்கணிக்கும் பெரியவர்களின் காலடியில் உலகமே ஒரு துாசியாகும்.

* கடமையிலிருந்து தப்பி ஓட வேண்டாம். எப்போதும் பணிகளில் ஈடுபடுங்கள். அதே சமயம், அதிலிருந்து விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்.

* கையில் ஜபமாலை உருளுகிறது. வாயோ இறைநாமத்தை ஜபிக்கிறது. மனமோ எங்கோ அலைந்து கொண்டிருக்கிறது. இப்படி கடவுளை வழிபடுவதை விட, சும்மா இருப்பது மேலானது.

கதறுகிறார் கபீர்தாசர்






      Dinamalar
      Follow us