ஆதிசங்கரர் அருளிய பிரஸ்னோத்தர ரத்னமாலிகா என்ற நூலில் இடம்பெற்றுள்ள கேள்வி பதில்களில்... இதோ 16 மட்டும்.
எது இதமானது - தர்மம்
எது நஞ்சு - பெரியவர்களின் அறிவுரையை அவமதிப்பது
எதிரி யார் - சோம்பல்
எல்லோரும் பயப்படுவது எதற்கு - இறப்புக்கு
குருடனை விடக் குருடன் யார் - ஆசையுள்ளவன்
சூரன் யார் - கெட்டவழியில் மனம் செல்லாமல் அதை அடக்குபவன்
மதிப்புடன் வாழ என்ன செய்வது - யாரிடமும் எதையும் கேட்காமல் இருப்பது
எது துக்கம் - மனநிறைவு இல்லாமல் இருப்பது
உயர்ந்த வாழ்வு எது - தவறு செய்யாமல் இருப்பது
நிலையில்லாதவை எவை - இளமை, செல்வம், ஆயுள்
எது இன்பம் தரும் - நல்லவர்களின் நட்பு
விலை மதிப்பற்றது எது - காலம் அறிந்து செய்யும் உதவி
இறக்கும் வரை உறுத்துவது எது - நம்பிக்கை துரோகம்
உலகத்தை வெல்பவன் யார் - உண்மையும் பொறுமையும் உள்ளவன்
செவிடன் யார் - நல்லதைக் கேட்காதவன்
நண்பன் யார் - பாவ வழியில் போகாமல் தடுப்பவன்
- க. ஜெயந்தி