sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 18, 2025 ,கார்த்திகை 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

சரஸ்வதியின் பக்தர்

/

சரஸ்வதியின் பக்தர்

சரஸ்வதியின் பக்தர்

சரஸ்வதியின் பக்தர்


ADDED : அக் 07, 2016 09:31 AM

Google News

ADDED : அக் 07, 2016 09:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சரஸ்வதி பக்தரான ஒட்டக்கூத்தர், நாமகளின் அருளால் பாடும் திறம் பெற எண்ணினார். இதற்காக திருவாரூர் மாவட்டம் கூத்தனூரில் ஓடும் அரசலாற்றில் நீராடி கலைவாணியைச் சிந்தித்து தியானத்தில் ஆழ்ந்தார். கலைவாணி அவர் முன் தோன்றி, தன் வாயிலிருந்த தாம்பூலத்தை (வெற்றிலை) கூத்தருக்கு கொடுத்தாள். அப்போதிருந்து அவர் பேரறிவும், ஞானமும் பெற்றார். கூத்தருக்கு கலைமகள் காட்சி கொடுத்து அருளிய திருத்தலம் என்பதால் கூத்தனூர் என்ற பெயர் ஏற்பட்டது. தாம் பாடிய தக்கயாகப்பரணியில் இத்தேவியை 'ஆற்றங்கரை சொற்கிழத்தி வாழியே' என்று பாடியிருப்பது இவரது பக்தியை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. 'கிழத்தி' என்பதற்கு 'கிழவி' என்றும், 'தலைவி' என்றும் பொருளுண்டு. வாக்குக்கு (சொல்) தலைவி என்பதால், இவளை ஒட்டக்கூத்தர் இப்பெயரிட்டு அழைத்தார். வடமாநிலங்களில் சரஸ்வதியை 'வாக்தேவி' என்பர்.






      Dinamalar
      Follow us