ADDED : ஏப் 28, 2017 10:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'அட்சய' என்ற சொல்லுக்கு 'குறைவில்லாதது', 'வளர்வது' என்று பொருள். அட்சய திரிதியை அன்று லட்சுமி, குபேரரை வழிபட வேண்டும். விளக்கிற்கு சந்தனம், குங்குமம் இட்டு பூக்களால் அலங்கரித்து ஐந்து முகங்களையும் ஏற்ற வேண்டும். இதன் மூலம் செல்வச்செழிப்புடன், அன்பு, மன உறுதி, நிதானம், சகிப்புத்தன்மை, சமயோசிதம் ஆகிய நற்குணங்களும் வளரும். இந்நாளில் நகை, ஆடை, மஞ்சள், அரிசி, பருப்பு, உப்பு, சர்க்கரை வாங்கினால் வளமான வாழ்வு உண்டாகும்.

