
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாசகம் பாடிய மாணிக்கவாசகருக்கு சில கோயில்களில் தனி சன்னதி உள்ளது.
1. புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஆத்மநாதர் கோயில் - சிவபெருமான் குருநாதராக வந்து மாணிக்கவாசகருக்கு உபதேசித்த தலம்.
2. மதுரை மாவட்டம் திருவாதவூர் கோயில் - மாணிக்கவாசகர் பிறந்த ஊர்.
3. தேனி மாவட்டம் சின்னமனுார் கோயில் - இங்கு மூலவர் மாணிக்கவாசகர், பிரகாரத்தில் சிவன், அம்மன் சன்னதிகள் உள்ளன.
4. உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயில் - மாணிக்கவாசகருக்கு ஆகமங்களை சிவபெருமான் உபதேசித்த தலம்.
5. சிதம்பரம் நடராஜர் கோயில் - சிவனுடன் இங்கு தான் மாணிக்கவாசகர் ஐக்கியமானார்.
தில்லைக்காளி கோயில் அருகில் தனி சன்னதி உள்ளது.