நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோயிலுக்கு கிழக்கில் தளியல் முத்தாரம்மன் கோயில் உள்ளது. இங்கு நோய் தீர வேண்டி பக்தர்கள் 'மண்டை அப்ப வழிபாடு' செய்கின்றனர்.
பாசிப்பயறும், சர்க்கரையும் கலந்த பூரணத்தை அரிசி மாவுக்குள் வைத்து, அதன் மீது மனித முகம் போல கண், காது, மூக்கு வைத்து அப்பம் தயாரிப்பர். இதற்கு ' மண்டை அப்பம்' என்று பெயர். தலையில் ஏற்படும் நோய் அனைத்தும் இந்த வழிபாட்டால் குணமாகும்.