நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வசனம் மதுரம் சரிதம் மதுரம்
வஸனம் மதுரம் வலிதம் மதுரம்!
சலிதம் மதுரம் ப்ரமிதம் மதுரம்
மதுராதிபதே ரகிலம் மதுரம்!!
மதுராவின் மன்னரான கிருஷ்ணரே. உன்னைச் சேர்ந்த அனைத்தும் இனிமை மிக்கவை. நீ பேசும் வார்த்தை, உனது வாழ்க்கை வரலாறு, அணிந்திருக்கும் ஆடை, சதைப்பற்று மிக்க உன் உடலும், நீ அசைந்தாடி வரும் அழகு எல்லாம் இனிமையானவை என்கிறது மதுராஷ்டகம். இதைப் பாடியவர் கிருஷ்ண பக்தரான வல்லபாச்சாரியார்.