
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவனின் அறுபத்து நான்கு வடிவங்களில் ஒருவர் பைரவர். இவரது வாகனம் நாய். எல்லா சிவன் கோயிலிலும் வட கிழக்கு மூலையில் நின்ற கோலத்தில் காட்சியளிப்பார்.
பாம்பை பூணுாலாகவும், பிறையைத் தலையில் வைத்தும், சூலாயுதம், பாசக்கயிறு, அங்குசம் ஏந்தியிருக்கும் இவர் பன்னிரன்டு ராசிகள், எட்டு திசைகள், பஞ்ச பூதங்கள், நவக்கிரகங்கள், காலத்தையும் கட்டுப்படுத்தும் சக்தி கொண்டவர். இவரே கிரகங்களில் பலம் மிக்க சனீஸ்வரரின் குருநாதர் ஆவார்.