
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மார்கழி மாதத்தில் நமக்கு தாயான ஆண்டாளை வேண்டி கீழ்க்கண்ட ஸ்லோகத்தை கூறுங்கள். அவரது அருள் கிடைக்கும்.
அஸ்மாத்ருசா மபக்ருதௌ சிரக்ஷிதாநாம்
அஹ்நாய தேவி தயதே யதஸௌ முகுந்த:
தந்நிச்சிதம் நியமிதஸ் தவ மௌளிதாம்நா
தந்த்ரி நிநாத மதுர: ச கிராம் நிகும்பை:
ஆண்டாளே! சாஸ்திரம் அனுமதிக்காத செயல்களைச் செய்த எங்களுக்கு, தங்களின் கணவரான ரங்கநாதர் அருள்புரிகிறார். காரணம் என்னவாக இருக்கும்? நீ சூடிக்கொடுத்த மாலைக்கு அவர் வசப்பட்டது தான். அதோடு வீணை போன்ற இனிய குரலால் தமிழில் பாசுரமும் பாடியிருக்கிறாய். அதனால் உன் பிள்ளைகளாகிய எங்களைத் தண்டிக்காமல் இருக்கிறார். அதற்காக உனக்கு எங்கள் வணக்கத்தை தெரிவிக்கிறோம்.