sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

வா முருகா வா

/

வா முருகா வா

வா முருகா வா

வா முருகா வா


ADDED : ஜன 16, 2025 01:45 PM

Google News

ADDED : ஜன 16, 2025 01:45 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எழுகடல் மணலை அளவிடில் அதிகம்

எனதிடர் பிறவி அவதாரம்

இனியுன தபயம் எனதுயிர் உடலும்

இனியுடல் விடுக முடியாது

கழுகொடு நரியும் எரிபுவி மறலி

கமலனும் மிகவும் அயர்வானார்

கடனுனது அபயம் அடிமையுடன் அடிமை

கடுகியுன் அடிகள் தருவாயே

விழுதிகள் அழகி மரகத வடிவி

விமலி முன் அருளும் முருகோனே

விரிதலம் எரிய குலகிரி நெரிய

விசை பெறு மயிலில் வருவோனே

எழுகடல் குமுற அவுணர்கள் உயிரை

இரை கொளும் அயிலை உடையோனே

இமையவர் முனிவர் பரவிய புலி

யூரினில் நடமருவு பெருமாளே.

அழகுள்ளவளும், மரகத மயிலாகத் திகழ்பவளுமான பார்வதி பெற்ற பிள்ளையே. விரிந்த கடலையும், கிரவுஞ்ச மலையையும் அழிப்பதற்காக மயிலில் வந்தவனே. ஏழுகடல்களும் கொந்தளிக்க அசுரர்கள் உயிரை உணவாக்க விரைந்து வரும் வேலாயுதம் தாங்கியவனே. தேவர்களும், முனிவர்களும் போற்றும் புலியூரில் நடனம் ஆடுகின்ற பெருமானே. ஏழுகடல் மணல் அளவை விட அதிகமான பிறவிகள் எடுத்து துன்பப்பட்டு விட்டேன்.

இனி என் உயிரும், உடலும் உன் திருவடிக்கே அடைக்கலம். இனி என்னால் பிறப்பெடுத்து உயிரை விட முடியாது. கழுகும், நரியும், நெருப்பும், மண்ணும், எமனும், பிரம்மாவும் எனக்காக பணிசெய்து அலுத்து விட்டார்கள். என் கடமை உன் திருவடியில் அடைக்கலம் ஆவதே. நான் உன் அடிமைக்கும் அடிமை. விரைந்து வந்து திருவடிகளைத் தந்தருள வேண்டும் என்கிறார் அருணகிரிநாதர். கர்ம வினை கழியவும், பிறப்பற்ற நிலையை அடையவும் இதை தினமும் படியுங்கள்.






      Dinamalar
      Follow us