ADDED : பிப் 13, 2025 12:36 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவபெருமானையும் பார்வதியையும் சுற்றி வந்து மாம்பழத்தை பெற்றவர் விநாயகர். இவர் தன்னைச் சுற்றி வருவோருக்கு தேகபலம், புத்திபலத்தை வழங்குவார்.
நெற்றியில் குட்டிக் கொள்ளுதல், தோப்புக்கரணமிடுதல், சிதறுகாய் போடுதல், கொழுக்கட்டை நைவேத்யம் என இவருக்குரிய வழிபாட்டு முறை பல இருந்தாலும் சிறப்பானது 'பிரதட்சிணம்' என்னும் வலம் வருதல் சிறப்பானது. நினைத்தது நிறைவேற சதுர்த்தியன்று 21, 48, 108 முறை விநாயகரைச் சுற்றுவர். அதிலும் அமாவாசை, பவுர்ணமி, திருவாதிரை நாளில் சிவபெருமானை வலம் வர நன்மை அதிகரிக்கும்.